ஏமன் ஹவுதிக்களுக்கு எதிராக அமெரிக்காவின் கடைசி ஆயுதம், USS Gridley நாசகாரி போர்க்கப்பல்.
ஈரான் - ரஸ்சியா - சீனா போர் ஆயத்த நிலை. பின்வாங்கிய அமெரிக்கா. விலகிக்கொண்ட ஐரோப்பா. ஓடி ஒழிந்த ரிஷி சுனக்.
அதிர்ச்சியில் இஸ்ரேல். ஆப்பு வைத்த ஐரோப்பா. UNRWAவுக்கு மீண்டும் நிதியுதவி.
இங்கிலாந்து அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு வளர்ந்து வரும் முஸ்லிம்கள்.
ஹவுத்தி ஏவுகணையை அழிக்க, அமெரிக்க கடற்படை நாசகாரி கப்பல், தனது கடைசி அடுக்கு பாதுகாப்பு கருவியை பயன்படுத்த வேண்டியிருந்தது என்று, அமெரிக்க அதிகாரி சிஎன்என் இடம் தெரிவித்தார்.
யுஎஸ்எஸ் கிரிட்லி நாசகாரி கப்பல், ஏமன் கப்பல் ஏவுகணையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, ஃபாலன்க்ஸ் சி ஐ டபிள்யூ எஸ் ஐப்பயன்படுத்தியது
ஃபாலன்க்ஸ் சி ஐ டபிள்யூ எஸ்ஸை அமெரிக்கா ஏன் பயன்படுத்தியது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில், ஃபாலன்க்ஸ் என்பது நாசகாரி கப்பலுக்கான கடைசி அடுக்கு ஆகும், இது ஒன்றை உருவாக்க 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும்.
இந்த நாசகார போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டால், அமெரிக்கா, அண்டார்டிக்காவில்தான் ரூம் போட்டு அழவேண்டும் என்று ஜோக்கர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.
மேலும், இந்த மாதிரியான ஒரு அதிநவீன போர்க்கப்பலை தொட்டுப்பார்க்க, ஈரானிய, அமெரிக்க, சீன ரகசிய ஆயுதங்களும் எகிறிக்குதித்துக்கொண்டு இருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
U N R W Aக்கு நிதியுதவியை தொடர முடிவு செய்த ஐரோப்பிய ஒன்றியம். தனது முடிவை மாற்றிக் கொண்டு U N R W Aக்கு நிதியுதவியை தொடர முடிவு செய்துள்ளது. இது காசா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
ஈரான் தாக்கப்படலாம் என்ற வதந்தியை ஊடங்களின் மூலம் கிளப்பிவிட்ட அமெரிக்காவின் செயலை உண்மை என்று நம்பி, தங்களை இந்தத் தாக்குதலிலிருந்து தொலைவு படுத்திக்கொள்ள ஐரோப்பா, U N R W Aக்கு மீண்டும் நிதியுதவியை ஒரு பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்திக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானைத்தாக்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று சீனாவும் ரஸ்சியாவும் விடுத்த கடுமையான எச்சரிக்கையும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் உள்கட்டமைப்பையே மாற்றும் அளவுக்கு வளர்ந்து வரும் இஸ்லாமிய வாக்கு வங்கி.
இங்கிலாந்தில் முஸ்லிம் வாக்கெடுப்பு டிசம்பர் 19 அன்று தொடங்கப்பட்டது.
முஸ்லிம் வாக்குகளைத் திரட்டுவதற்கான முதல் ஒருங்கிணைந்த முயற்சி இது அல்ல என்றாலும், இன்றுவரை இது மிகவும் சக்திவாய்ந்தது.
முஸ்லிம் வாக்குகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், "இது போராட்ட இயக்கம் அல்ல. இது உள்கட்டமைப்பு மாற்றத்தின் இயக்கம்.
"இன்னும் பத்தாண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம்களின் வாக்குகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது"
அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், TORY கட்சியும், Labour கட்சியும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்துகொண்டமைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியது இருக்கும்.
ஏமனில் கூலிப்படைக்களைக் கொண்டு, பெரும்படை உருவாக்கி, ஏமனுக்குள் தரை வழியாக நுழையத் திட்டமிடப் பட்ட நகர்வுகள் தெளிவாகத் தெரிகின்றன என்று அலி அல்-கஹும் தெரிவித்துள்ளார். கடந்த போரில் சஆதவில் நடந்த தரை வழித்தாக்குதல்களுக்குப் பிறகு இப்போது முதற்சிகள் நடக்கிறது. இது தாக்குதல்களுக்கான நமது தயார்நிலை மற்றும் துப்பாக்கிகளில் நமது கையை தயாராக வைத்திருப்பதற்கான தெளிவான செய்தியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏமனில் ஹுதைதா மற்றும், பிற இடங்களில் அமெரிக்க-பிரிட்டிஷ் பெயரில் ஊடுருவும் எந்தவொரு கூலிப்படை இயக்கமும் ஒரு தீர்க்கமான பதிலடியை சந்திக்கும் என்றும் தெளிவு படுத்துகிறார்.
ஏமனின் உள்ளூர் ஆதாரங்களின்படி, நாட்டின் தெற்கில் உள்ள, அல் ஹுதைதாவை குறிவைத்து, அமெரிக்க ஆக்கிரமிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏமனின் மேற்கே RedSea கடலோர நகரமான ஹுதைதாவின் வடக்கே, அல்-ஜப்பானா பகுதியை அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் தாக்குதல்கள் நடத்திக்கொண்டு இருக்கின்றன என்று தலைநகர் சனாவில் இருந்து அலமயாதீன் செய்தி நிருபர் தெரிவிக்கிறார்.
இஸ்ரேல் ஆயுதங்களைக் கொண்டே இஸ்ரேலைத் தாக்கும் ஹமாஸ். இஸ்ரேல் வீசிய வெடிபொருள்களை மறுசுழட்சி செய்து, இஸ்ரேலை திருப்பித்தாக்கும் alquassam brigade.
ஆக்கிரமிப்பு ஆட்சிக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே, இஸ்ரேலால் தூண்டப்பட்ட எல்லை மோதல்கள் தொடரும் நிலையில், லெபனான் எதிர்ப்பு இயக்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் டெல் அவிவ் உடனான சாத்தியமான போருக்கு குழு முற்றிலும் தயாராக இருப்பதாக கூறுகிறார்.
ஹிஸ்புல்லாவின் நிர்வாக கவுன்சிலின் தலைவர், சையத் ஹாசிம் சஃபிதீன், பெய்ரூட்டில் புதன்கிழமை உரையாற்றிய போது இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
லெபனானின் அல்-மனார் தொலைக்காட்சி "லெபனான் தொடர்பான எந்தவொரு இஸ்ரேலிய தவறான கணக்கீட்டிற்கும் ஹெஸ்புல்லாவின் [சாத்தியமான] விடையிறுப்பு மிகவும் சக்திவாய்ந்ததாகவும் விரைவாகவும் இருக்கும்" என்று லெபனானின் அல்-மனார் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.