Wednesday, 17 January 2024

இன்றைய பரபரப்பு உலகச்செய்திகளின் தொகுப்பு Middle East News Roundup: Qata...


இன்றைய பரபரப்பு உலகச்செய்திகளின் தொகுப்பு.

செய்த்தித் தொகுப்புகளில் இன்னும் பல.. இஸ்ரேலைத்தாக்கிய ஹிஸ்பொல்லாஹ் 

பணயக் கைதிகளுக்கு,  மருந்து ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் தரையிறங்கியது; காசாவில், இரண்டு இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ், மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான, கத்தார் மத்தியஸ்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பணயக்கைதிகள், மற்றும் காசா பொதுமக்களுக்கு, மருந்து மற்றும் உதவிகளை ஏற்றிச் சென்ற கத்தார் விமானம், எகிப்தில் உள்ள அரிஷ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. காசாவில் உள்ள பணயக் கைதிகளுக்கு  மருந்துகள் அடையும்போது, மற்ற நோயாளிகளுக்கும் தேவைப்படும்  மருந்துகளை அனுமதிக்கும் உடன்பாடு இஸ்ரேல் நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொண்டு செல்லப்பட்ட மருந்துகளில்,  ஆஸ்துமா, நீரிழிவு, சிறுநீரக நோய், இதய நோய் போன்றவற்றுக்கான மருந்துகள் உள்ளன. இந்த மருந்துகள் பிணைய கைதிகளுக்கு போய் சேருமா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

ஈராக்கில் தாக்குதல் நடத்திய,  ஈரானின் 'அத்துமீறல்' குறித்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஈராக் புகார் அளித்துள்ளது  இதுகுறித்து, ஈராக் வெளியுறவு அமைச்சகம், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஈரானின் "ஆக்கிரமிப்பு" தொடர்பாக, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு எதிராக ஈராக் புகார் அளித்துள்ளது.

டெல் அவிவ் நகரில், போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை,  இஸ்ரேலிய போலீசார், வலுக்கட்டாயமாக கலைத்ததுடன், போராட்டக்காரர்கள் வைத்திருந்த பதாகைகளையும் பறிமுதல் செய்தனர்.

பணயக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியில், கத்தார் அதிகாரிகளுடன், அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.  

 பல ஐரோப்பிய நாடுகள், "அக்கறை" கொண்ட அரபு நாடுகள், மற்றும் அமெரிக்கா ஆகியவை, பாலஸ்தீனத்திற்கு மறுசீரமைப்பு நிதியை ஈர்க்க க்கூடிய, ஒரு ஒருங்கிணைந்த, பாலஸ்தீனிய அரசாங்கத்திற்கான, ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்று வருகின்றன என்று, நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் டாவோஸில், ஒரு பேட்டியின்போது கூறினார்.

வாஷிங்டனின் முழு ஆதரவையும் அனுபவித்து வரும் இஸ்ரேல், காசாவில் போர் என்ற பெயரில், இனப்படுகொலைகளை செய்து வரும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் தலைவிதியுடன் "தனது தலைவிதியை முடிச்சுப் போட" வேண்டாம் என்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை ஈரான் எச்சரித்துள்ளது.

செவ்வாயன்று, அமெரிக்க வணிக செய்தி சேனலான, சிஎன்பிசியிடம் பேசிய ஈரானிய வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், மேற்கு ஆசியாவில், பாதுகாப்பின்மையின் வேராகத்திகழும் இஸ்ரேலின் படுகொலைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை விவரித்தார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த, உலகப் பொருளாதார மன்றத்தின் போது, அவர் அளித்த பேட்டியில், "அமெரிக்கா தங்கள் தலைவிதியை, நெதன்யாகுவின் தலைவிதியுடன் முடிச்சுப் போடக்கூடாது, திரு. ஜோ பைடன் அவ்வாறு செய்யக்கூடாது" என்று கூறினார்.

"இஸ்ரேலில், நெதன்யாகு போன்ற குண்டர்களுடன், பைடன் மற்றும் வெள்ளை மாளிகையின் முழு அளவிலான ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையின் வேராக மாறும் என்று தெரிவித்தார்.


அமெரிக்க செனட் கூட்டத்தில்,  பேர்ணி சாண்டர்ஸ் முன்வைத்த, முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியில் நடக்கும்  போரில்,  இஸ்ரேல் மனித உரிமை மீறல்களை செய்கிறதா என்பதை கண்டறிய ,  நிபந்தனையாக வைக்கும் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, அமெரிக்க செனட் பெரும்பான்மையாக நிராகரித்துள்ளது.

செனட்டர் தீர்மானம் இன்று புதன்கிழமை, பதினோரு  வாக்குகள் ஆதரவாகவும், எதிராக எழுபத்திரண்டு  வாக்குகளுடனும் நிறைவேறத் தவறியது, நடைமுறையளவில் தீர்மானத்தை தோல்வியடையச்செய்தது..

"மனித உரிமைகள் மற்றும் நமது சொந்த சட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்க உதவி பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று சாண்டர்ஸ் வாக்கெடுப்புக்கு முன்னர் ஒரு உரையில் கூறினார்.

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு "மனிதாபிமான பேரழிவு" என்று விவரித்த அவர், "காசாவில் ஏற்பட்டுள்ள அழிவின் அளவின் காரணமாக, இந்த வாக்கெடுப்பு அவசியமானது" என்று கூறும் அளவுக்குச் சென்றார்.

பிரச்சினை ஹமாஸிடம் இருக்கும்போது, முழு பாலஸ்தீனிய மக்களுக்கும் எதிராக போருக்குச் செல்ல, அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவியைப் பயன்படுத்த, இஸ்ரேலுக்கு உரிமை இல்லை என்றும், அவர் வலியுறுத்தினார்.

லெபனானின் எதிர்ப்புப் படைகள் ஷெபா பண்ணைகளில் உள்ள சியோனிச நிலைகளை குறி வைத்துத் தாக்கின.

அல் ஜசீராவின் புதன்கிழமை அறிக்கையின்படி, இஸ்ரேலிய ராணுவப்  படைகள், ஹெஸ்பொல்லாவிடமிருந்து, புதிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய  வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையில், லெபனான் ஊடகங்களின் அறிக்கைகளின்படி, சியோனிச ஆட்சி கஃபர்கேலா மற்றும், டெய்ர் மிமாஸ் ஆடிய பகுதிகள் மீது மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது . 

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின்  வடக்கில், ஒரு சியோனிச குடியேற்றத்தைச் சுற்றியுள்ள, மூன்று இராணுவ தளங்களை, ஹெஸ்புல்லா குறி வைத்துத் தாக்கி உள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் வடக்கில் உள்ள, அல்-நபி யுஷாவையும், ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணைகளால் தாக்கின.

இஸ்ரேலின் மீதான எதிர்ப்புப் படைகளின் தாக்குதல்கள், காசாவில், ஒரு பெரிய அளவிலான படுகொலையில், இஸ்ரேல் ஈடுபட்டுள்ள நிலையில் வந்துள்ளன, அங்கு, அது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குடிமக்களை கொன்று குவித்துள்ளது. 

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...