அடுத்த சில மணி நேரங்களில் ஈரான் பதிலடி தருமா? Operation True Promise 3 ரெடி?
பதுங்கு குழிக்குள் ஒளிந்தபடி ஈரானைத் தாக்க விமானப்படையை ஏவிய நெதன்யாஹு.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் மீதான அவர்களின் தாக்குதலை நிலத்தடி பதுங்கு குழியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெதன்யாஹூவின் மகன் மியாமியில் ஒளிந்து கொள்கிறார். நெதன்யாஹூ பதுங்கு குழியில் ஒளிந்து கொள்கிறார். இஸ்ரேலிய பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும்போது, முன் வரிசையில் யஹ்யா சின்வார் இருந்தார் என்று நெட்டிஸன்கள் கழுவிக்கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தெஹ்ரான் மீது சூரியன் மெதுவாக உதிக்கிறது. ஈரான் போரை வென்றது, தெஹ்ரான், இரவு முழுவதும் மேம்பட்ட விமான எதிர்ப்பு அமைப்புகளை இயக்கும் வீரர்களால் ஈரான் பாதுகாக்கப்பட்டது என்று, உலகம் முழுவதும் மக்கள் ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இனி ஈரானின் பதிலுக்காக காத்திருப்போம் என்றும் கூறிவருகிறார்கள்.
---
இஸ்ரேல் விமானி தற்கொலை.
லெபனானில் கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் பத்து இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வீழ்ச்சி.
இஸ்ரேலிய விமானப்படை விமானி ஆசஃப் தாகன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்குமுன் தனது தாயாருக்கு ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளார்.
அப்பாவி பாலஸ்தீன மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த பிறகு அவர், மன உளைச்சலுடன் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இறப்பதற்கு முன்பான அவரது கடைசி வார்த்தைகள் என்னவென்றால்..:
"இன்று, என் கண்ணில் கண்ணீர் ஆறாக வழிகிறது, எனது இந்த வார்த்தைகள் குழப்பத்துடனும், ஆழ்ந்த மனவேதனையுடனும் எழுதப்படுகின்றன. எதைச் சொல்வது, எதைப் பகிர்வது, எதைப் பகிரக் கூடாது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரியாத பல உண்மைகள் உள்ளன. உங்கள் அன்பு என் இதயத்தில் ஆழமாக பதிந்துள்ளது. உங்களிடம் உண்மை சொல்வதால், ஒருவேளை நான் ஆறுதல் அடைந்தேன் என்பதை நீங்கள் அறியும்போது அறிவது உங்களுக்கு நிம்மதியளிக்கும், மேலும் நீங்கள் என்னைப் பற்றி இனி கவலைப்பட மாட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு, தெரியாத பல உண்மைகள் என்று குறிப்பிடப்பட்டது, அப்பாவி பாலஸ்தீனர்களை கொன்று குவித்தது என்பது தெரிகிறது.
--
இஸ்ரேலின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலியர்கள் நிலத்தடி பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஒழிந்ததைப்போல இல்லாமல் , ஈரான் மீதான இஸ்ரேலின் துல்லிய தாக்குதலை கேலி செய்ய, ஈரான் மக்கள் கூரைகளின் மேல் பரப்புகளுக்கு சென்று, இஸ்ரேலின் துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளை துலாவிக் கொண்டிருந்தார்களாம்.
---
தற்போதைய முக்கிய மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்தி. ஈரானும் ஈராக்கும் தங்கள் வான்வெளியை மூடின. வரும் சில மணி நேரங்களில் ஈரான் பதிலடி கொடுக்கலாம். Operation True Promise மூன்று என்று இந்த நடவடிக்கைக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஏவுகணைகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
எனினும், இஸ்ரேலால் ஈரானின் மீது பெருத்த சேதத்தை ஏற்படுத்த முடியாத நிலையில், ஈரான் பதில் தாக்குதல் நடத்தாது என்றும், Operation True Promise மூன்று எனப்படும் இந்த நடவடிக்கையைப் பற்றிய செய்தியானது, இஸ்ரேலிய ராணுவத்தை தூக்கமிழக்கச்செய்து, பயத்தில் வைக்கக்கூடிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
---
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நாங்கள் பங்கேற்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்றும், இராஜதந்திரத்தை அதிகரிப்பதன் மூலம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைப்பதே எங்கள் குறிக்கோள் என்று கூறியுள்ளது.
இஸ்ரேல் மீதான அதன் தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றும் , அப்பொழுதுதான் இந்த போர் சுழற்சி மேலும் விரிவாக்கம் இல்லாமல் நிறுத்தப்பட முடியும் என்றும் கூறியுள்ளது.
மேலும் தகவல்கள் தொடர்கின்றன. subscribe செய்துகொள்ளுங்கள். நன்றி.
---.