ஒப்பந்தத்தை நிராகரித்த ஹமாஸ்.
நெதன்யாஹுவுவின் பிடிவாதத்தால் சிக்கல்.
மேற்கத்திய ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்.
காசா போர் நிறுத்த முன்மொழிவில, அதாவது, தோஹால நடந்த gaazaa ceasfire fire அக்ரீமெண்ட்ல குறிப்பிட்டிருந்த, நெதன்யாஹுவோட நிபந்தனைகள சேர்க்கர முயற்சிகள, ஹமாஸ் 'திட்டவட்டமாக நிராகரிச்சிருக்கு.
பேச்சுவார்த்தைகள்ல, 'ஏற்கனவே சில இடைவெளிகளைக் குரைச்சுட்டதா அமெரிக்கா சொல்லுது, ஆனா, நெதன்யாஹுவோட நிபந்தனைகள் ஒரு தடையா இருக்கிறதாவும், அந்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏத்துக்கிட்டதா ஊடங்கள்ல வர்ற செய்திகள் உண்மையில்லாத வதந்திகள்னு சொல்லப்படுது.
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாவும், காசாவில் பிடிச்சு வச்சிருக்கிற இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கிறது தொடர்பான பேச்சுவார்த்தை, கத்தார் தலைநகர் தோஹாவில இரண்டாவது நாளாக முடிவடைஞ்சிருச்சு.
"பைடனோட முன்மொழிவோட ஒரு பகுதியா, நெதன்யாகுவோட நிபந்தனைகளைச் சேர்க்கறதுதான், இஸ்ரேலிய தூதுக்குழுவோட முக்கியமான முயற்சிகளா இருந்ததுன்னு, பாலஸ்தீனிய இயக்கத்தோட வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை மிடில் ஈஸ்ட் ஐ பத்திரிக்கைக்கு தெரிவிச்சுருக்காங்க. இந்த இடைச்செருகல் முயற்சிகள ஹமாஸ் போராளிகள் ஏற்றுக்கொள்ளாம திட்டவட்டமா மறுத்துட்டாங்க.|
இந்த தோஹா பேச்சுவார்த்தை முடிவு இஸ்ரேலுக்கு சாதகமா முடிஞ்சிருக்குன்னு, இஸ்ரேலிய பத்திரிக்கைகளும், மேற்கத்திய ஊடகங்களும் பொய்யான வதந்திகளை பரப்புறது ஒரு பொய்யான தகவல்னும், உண்மைல ஹமாஸ் இதை ஏத்துக்கலைன்னும் சொல்றாங்க.
பேச்சுவார்த்தைல கலந்து கொள்ளாத, ஆனா, மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கட்டாரோட நெருங்கிய தொடர்பில இருக்குர ஹமாஸ், தற்போது மேசையில் உள்ள , போர்நிறுத்த ஒப்பந்தத்த அமல்படுத்துறதுல எல்லாப்பக்கமும் கவனம் செலுத்தனூன்னு தொடர்ந்து சொல்லிட்டு வருது.
நெதன்யாஹுவுவோட பிடிவாதத்தால, சிக்கல் தீர்ந்த வழியக்காணோம். பாலஸ்தீன அப்பாவி மக்களுக்கு ஒரு தீர்வும் காணோம்.
---
ஈரானைச்சேர்ந்த பல அதிகாரிகள் சொன்னபடி, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடர மத்தியஸ்தர்கள் கேட்ட கால அவகாசத்தைக் கொடுத்து, அதன் முடிவுக்காக காத்திருக்கிறதா, ஈரான் சொல்லியிருக்கு. முடிவுகள் போர் நிறுத்தத்துக்கு சாதகமா, பாலஸ்தீன மக்களுக்கு தேவையானபடி நல்ல படியா அமஞ்சுச்சுன்னா, இஸ்ரேல் மீதான தாக்குதல தவிர்க்க வாய்ப்பு இருக்குது அப்படின்னும் சொல்றாங்க.
ஈரான்ல வச்சு, ஹமாஸோட ஒரு உயர்மட்ட ஹமாஸ் தலைவரை படுகொலை செஞ்சதுக்காக, இஸ்ரேலுக்கு எதிரா திட்டமிட்ட, பழிவாங்குர நடவடிக்கைகள ஈரான் தாமதப்படுத்தும்னு எதிர்பார்க்குறாங்க, இது காஸாவில போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தர்கள் நடத்துற பேச்சு வார்த்தைக்கான நேரத்தை அனுமதிக்கும்னு அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவிச்சுருக்காங்க.
---
இப்படி அமைதிப்பேச்சு வார்த்தை ரெண்டாவது நாலா நீடிக்குற நிலையில, கொஞ்சம்கூட அடங்காத இஸ்ரேல், இன்னைக்கு சனிக்கிழமை காலைல இஸ்ரேலிய இராணுவம், கான் யூனிஸுக்கு வடக்கிலயும், டெய்ர் அல்-பலாவுக்கு கிழக்கிலயும் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள வெளியேத்துரதுக்கான புதிய வெளியேற்ற உத்தரவுகள பிறப்பிச்சிருக்கறது மட்டுமில்லாம, "மனிதாபிமான மண்டலம்னு அழைக்கப்படுற அளவ மறுபடியும் கொறச்சிருக்கு. இதனால இந்தப்பகுதியில் தஞ்சம் புகுந்திருக்குற, ஒரு லட்சத்து எழுபதாயிரம் பேரோட நெலம ரொம்ப ரொம்ப மோசமா மாறியிருக்கு.
இப்போ ஒரு நிமிஷம் யோசிச்சுப்பாருங்க. பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கறதுனால, ஈரான் இஸ்ரேல் மேல தாக்குதல் நடத்தலாமா பொறுமையா காத்திட்டு இருக்கு. ஆனா, அந்த பேச்சு வார்த்த முடுவுக்கு வர்றதுக்கு முன்னால எந்த அளவுக்கு அதிகமா தாக்குதல் நடத்தி, உயிர்ச்சேதத்தையும் பொருள்சேதத்தையும் உண்டாக்க முடியுமோ அந்த அளவுக்கு உருவாக்கிடணும்னு துடிச்சிட்டு இருக்கு.
---
இந்த இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு, பயங்கரவாத அரசாங்கத்துக்கு அமேரிக்கா ஆயுதம் வழங்கறதும், மேற்கத்திய நாடுகள் ஆதரவாக இருக்கறதுக்கும், இன்னும் பல அரபு நாடுகள் கண்டும் காணாமலும் இருக்கிறதும் எந்த அளவுக்கு கொடுமைன்னு சொல்றது போங்க. பத்தாததுக்கு சமாதானம் பேசுறோம்னு சொல்லி, தக்க தயாரான ஈரானையும் தந்திரமாக தடுத்து வச்சுட்டு இருக்குறாங்கன்னுதான் தோணுது.
ஒருவகைள, எப்படியாவது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை முழுசா அழிக்கிறதுக்கு உண்டாகுற நேரத்த, இஸ்ரயிலுக்கு உருவாக்கித்தர்றதுக்காக, சமாதானப் பேச்சுவார்த்தைங்கற பேருல, தில்லாலங்கடி வேலை பாக்குறதாகத்தான் தோணுது. நல்லதோ கெட்டதோ, லாபமோ நஷ்டமோ, இஸ்ரேலுக்கு எதிரா ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை எடுத்து, அத அடிச்சு பின்னுக்கு தள்ளுரத தவிர, வேற எந்த வாய்ப்பும் இருக்கறதாவே தெரியலையே.
---