தொடரும் ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்கள். டெல் அவிவ் முழுவதும் தொடர்ந்து ஒலிக்கும் சைரன்கள். ஓரி மில்லர் என்பவர் இஸ்ரேலிலிருந்து பதிவு செய்திருக்கிறார். தலைநகரில் இரவும் பகலும் மக்கள் பயத்துடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அங்கு வசிப்பவர்களின் செய்தியாக உள்ளது.
இன்று, டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலில், பொதுமக்களை நோக்கி, ஹமாஸ் கண்மூடித்தனமாக ராக்கெட்டுகளை வீசியது என்று ஜோ ராபர்ட்ஸ் என்பவர் பதிவு செய்திருக்கிறார்.
மறுபுறம், ஹெஸ்புல்லாஹ், இஸ்ரேல் எல்லைகளில், பல இடங்களில் கடும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. முக்கியமாக ராணுவ தலங்களையும், ராணுவம் தொடர்பான ரகசிய இடங்களையும் துல்லியமாகத் தாக்கித் தகர்த்து வருகிறது.
Kiryat Shmona, tayhat hill, Al-Manara மற்றும் Yifthah போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகவும், வெடிச்சத்தம் கேட்டதாகவும், அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. `Ma’ale Golani` Barracksசில் Falaq -1 ஏவுகனைளைக்கொண்டு துள்ளியத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹெஸ்புல்லாஹ் அறிவித்துள்ளது.
ஹெஸ்புல்லாஹ்வின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, லெபனான் எல்லையில் இஸ்ரேல் படைகள் குவிப்பு. லெபனானுக்குள் அதிரடியாக நுழையப்போகும் இஸ்ரேல் ராணுவம். பாதுகாப்பு மந்திரி யோவ் கல்லன்ட் அறிவித்துள்ளார்.
காசா நகரில், ஐ.நா. தங்குமிடம் மீது, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இந்தக் கைது கொடுமைகளுக்கு பயந்து, பெண்களும் குழந்தைகளும், UNRWA தங்குமிடத்திலிருந்து தப்பி ஓட்டம்.
யு.என்.ஆர்.டபிள்யூ.ஏ தங்குமிடம் ஒன்றில், தஞ்சம் புகுந்திருந்த டஜன் கணக்கான ஆண்களை, இஸ்ரேலிய படைகள் கைது செய்ததை அடுத்து, பெண்களும் குழந்தைகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக, வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதலில், தனது முழு குடும்பமும் கொல்லப்பட்ட பின்னர், பல மணி நேரங்களாக காரில் சிக்கிய, ஆறு வயது சிறுமியை மீட்கும் முயற்சியில், காசா நகரத்தில் உள்ள தனது குழுவுடனான தொடர்பை இழந்ததாக, பாலஸ்தீனிய Red Crescent அமைப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்தித்துணுக்குகள் :
காஸாவில் குழந்தைகளைக் கொன்று குவித்து, பாதுகாப்பை ஏற்படுத்த முடியாது. உடனே போரை நிறுத்து என்று, இஸ்ரேல் அரசை நிர்ப்பந்தித்து, telavivஇல் பெரும் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சவுத் ஆப்பிரிக்கா உண்மையிலேய, பாலஸ்தீன மக்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால், பாலஸ்தீனத்தில் உள்ள போராளிகளுக்கு முதுகெலும்பாக, அவர்களுக்கு தேவையான ஆயுதங்களை அளியுங்கள் என்று E F F அழைப்பு விடுத்துள்ளது. இந்த E F F என்பது, உலக Economic Free Forum என்பதாகும்.
அநியாயக்காரர்கள், பண பலத்துடனும், ஆயுத பலத்துடனும், உலக தலைவர்களாக இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையோ, ஐக்கிய நாடுகள் செக்யூரிட்டி கவுன்சிலோ, சர்வதேச நீதி மன்றங்களோ, எந்த நியாயத்தையும் உலகில் யாருக்கும் பெற்றுத் தர முடியாது, இவை எல்லாம், அநியாயாயக்காரர்களுக்கு துணைபோக மட்டுமே உருவாக்கப்பட்ட வெறும் கண் துடைப்புகள் தான். இவைகளினால் எந்தப்பயனும் இல்லை.
சில முக்கிய நாடுகள், UNRWAக்கு அளித்து வந்த நிதியை நிறுத்திய நிலையில், பாலஸ்தீனம் விடுதலை பெறும் வரை, அயர்லாந்து மக்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதை நிறுத்த மாட்டார்கள் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறார்கள்..
UKயில் வறுமை வளரத்துவங்கி இருக்கிறது/ இரண்டாயிரத்து இருபத்து ஒன்றுக்கு முன்பு பதிமூன்று புள்ளி நான்கு மில்லியன் என்னும் கணக்கில் வறுமையில் இருந்த மக்களின் எண்ணிக்கை, தற்போது பதிநான்கு புள்ளி நான்கு மில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் நான்கு மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.
அடுத்து, பின்வரும் காரணங்களுக்காக அமெரிக்கா ஈரானைத் தாக்காது:
ஈரான் ஏற்கனவே அணு ஆயுத நாடாக உள்ளது, அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பில் கொண்டு, பல ஆயுதங்களை தயாரிக்கும் திறன் கொண்டது.
பென்டகன் ஒருபோதும், ஈரானுக்கு எதிரான, போர் உருவகப்படுத்துதலை, அதாவது War game simulationஐ வென்றதில்லை. மில்லினியம் சேலஞ்ச் எனப்படும் இரண்டாயிரத்து இரண்டில் நடத்தப்பட்ட பயிற்சியிலும் இது வெளிப்பட்டது.
அடுத்து,
காஸாவில், சட்டவிரோத குடியேற்றங்கள் கட்டப்படாது என்று, இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவுக்கு 'உத்தரவாதம்' அளித்துள்ளார்.
பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதையோ, அல்லது காசா பகுதியிலிருந்து அவர்களை இடமாற்றம் செய்வதையோ, தாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறோம் என்று, அமெரிக்க அறிக்கை மீண்டும் வலியுறுத்தியது.
தொடர்ந்து ஆறாவது நாளாக, பொதுமக்கள் போல் வேடம் போட்ட, இஸ்ரேலிய தீவிரவாதிகள், கர்ம் அபு சலேம் எல்லைக் பகுதியில் கூடி, மனிதாபிமான உதவிகள் ஹமாஸுக்கு செல்லும் என்று கூறி, மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுக்கின்றனர்.
இதற்கிடையில், காசாவின் வடக்கில் உள்ள குடிமக்கள், உணவு முற்றிலும் இல்லாததால், ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் இல்லாமல் இருப்பதாக எச்சரித்துள்ள நிலையில், பட்டினியால் பல இறப்பு செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பல தொடர் செய்திகளுக்கு Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.
No comments:
Post a Comment