Monday, 15 January 2024

அதிரடி திருப்பங்கள் : ஜோ பிடென் VS நெதன்யாஹு இஸ்ரேல் இழந்தது 4,50,000 ...


ஜோ பிடென் VS  நெதன்யாஹு 
அதிகமா உரசுனது பத்திக்கிச்சுங்கோ..!

நண்பர்களே..!

காஸா யுத்தம் 100 நாட்களை எட்டிய நிலையில், பொறுமையின் எல்லைக்குச்சென்ற ஜோ பிடென்.

பதட்டமான டிசம்பர் 23 அழைப்பிலிருந்து, 20 நாட்களில் பிடென் நெதன்யாகுவுடன் பேசவில்லை, விரக்தியடைந்த பிடென் "இந்த உரையாடல் முடிந்தது" என்ற வார்த்தைகளுடன் முடித்தார். போரின் முதல் இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசாவில் போர் தொடர்பான நிகழ்வுகளில், பிடென் நிர்வாகத்தின் சமீபத்திய கோரிக்கைகளை நிராகரித்ததால், பிடென் உள்ளிட்ட பலர்  மிகவும்  விரக்தியடைந்துள்ளனர், இந்த பிரச்சினையை நேரடியாக அறிந்த நான்கு அமெரிக்க அதிகாரிகள் இந்த செய்தியைத் தெரிவித்தனர்.
-----------------------

இது ஏன் இப்போது முக்கியமானது என்றால், 100 நாட்களுக்கு முன்பு அக்டோபர் ஏழு  ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, பிடென் இஸ்ரேலுக்கு தனது முழு ஆதரவையும், தடையில்லாத  இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவையும் அளித்துள்ளார், ஒரு தேர்தல் நடக்கின்ற ஆண்டில், வெளிப்படையாக, பகிரங்கமாக ஆதரவை அளித்திருந்தாலும், திரைக்குப் பின்னால், பிடென் தனது பொறுமையை இழந்திருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன, என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் இருபத்து மூன்றாம் தேதி, பிடென்,  நெதன்யாஹூவிடம், மேற்குக்கரையிலிருந்து வசூலித்த வரிப்பணத்தை பாலஸ்தீனத்திற்கு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதற்க்கு நெதன்யாஹு மறுத்ததால் கோபமடைந்த பிடென், பேச்சு இத்துடன் முடிந்து விட்டது என்று தொலைபேசியை வைத்து விட்டதாகவும் , அதன் பிறகு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

-------------- இஸ்ரேல் இழந்தது 4,50,000 கோடி ரூபாய் - இஸ்ரேலிய வங்கி.

ஹமாஸுக்கு எதிரான போருக்கு சுமார் நாற்பத்தொன்பது  பில்லியன் யூரோக்கள் செலவாகும் என்று இஸ்ரேல் வங்கி தெரிவித்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில், சுமார், நாலு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள். மலைக்க வைக்கிறதல்லவா? இத்தனையும், நெதன்யாஹூ என்ற தலைக்கனம் பிடித்த ஒற்றை நாரினால் உண்டான செலவுகள் என்று பேசப்படுகிறது.

லண்டனில், சியோனிச எதிர்ப்பு தோரா  யூதர்கள், மற்றும் முஸ்லிம்கள் ஒன்று கூடி, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளித்தனர். சியோனிஸ்டுகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களை அவமதிக்கவும், அச்சுறுத்தவும் தொடங்கினர்.

யூதர்களும் முஸ்லீம்களும் ஒன்றிணைந்து சண்டையிடுவதை, சியோனிஸ்டுகள் பொறுத்துக்கொள்ள முடியாமல் கதறுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

-------------
சீனாவின் Foreign Minister  வாங் யீ, "சுதந்திரமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீனத்தை" நிறுவுவதற்கும், இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை, ICJ ஆலோசித்து வரும் நிலையில், காஸாவில் போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தார்..


100 நாட்கள் போருக்குப் பிறகு, சியோனிச ஆட்சி ஒவ்வொரு முனையிலும் தோல்வியைத் தவிர வேறு எதையும் காணவில்லை - அபு உபைதா..

"அவர்கள் ஒரு பணயக்கைதியையும் மீட்கவில்லை."

"அவர்கள் காசா முழுவதும் பல பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர், இது ஜியோனிஸ்டுகளுக்கு பெரும்  சங்கடமாக உள்ளது."

--------------

கடந்த நூறு  நாட்களில் முப்பதாயிரம்  வீரர்கள் வரை செயலிழந்தவர்களாக கருதப்படலாம் என்று IDF கூறுகிறது.

சகோதர சகோதரிகளே... இதுவே இப்படியென்றால், அவர்களது வீரர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்?!
எதிரி இராணுவத்தில், இது முற்றிலும் எதிர்பார்த்திருவிக்கவே முடியாத இழப்புகள், என்று ஹசன் நஸ்ரல்லாஹ் தெரிவித்திருக்கிறார்,

--------------

இப்போது நெதன்யாகு எகிப்துடனும்  போரை விரும்புகிறார்.

“ஹமாஸுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் இருக்க, காசா மற்றும் எகிப்து எல்லையை மூட வேண்டும்.. அந்த எல்லையை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுக்காமல், காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது.

 நாங்கள் ஹமாஸை அழிப்போம், நாங்கள் காசா பகுதியை இராணுவமயமாக்குவோம், ஆனால் இராணுவ உபகரணங்களும், பிற கொடிய ஆயுதங்களும், அந்த தெற்குப் பாதையில், எகிப்தின் எல்லையில் தொடர்ந்து ஊடுருவக்கூடும், எனவே நாங்கள் அதை மூட வேண்டும். என்று நெதன்யாஹு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், இஸ்ரேல் எல்லையை கைப்பற்ற முயன்றால், அது எகிப்து மீதான போர் அறிவிப்பாகவே பார்க்கப்படும், என எகிப்து ஏற்கனவே கூறியுள்ளது.

அந்த எல்லையைத் தாண்டி,  ஆயுதங்களும் வருகின்றன என்பதற்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இஸ்ரேல் அதை ஏன் கட்டுப்படுத்த விரும்புகிறது என்பது வெளிப்படையானது, ஏனென்றால் அவர்கள் காசாவிலுள்ள மக்களை எகிப்துக்குள் அனுமதிப்பார்கள், பிருகு மீண்டும் காசா திரும்ப அனுமதிக்க மாட்டார்கள்.

அவர்கள் தங்கள் "மனிதாபிமானம்", என்ற போர்வையில் மக்களை வெளியேற்றுவார்கள்.அத்தோடு அவர்கள் வேலை முடிந்துவிடும். பின் காசாவுக்குல் செல்லவே முடியாது.
-----

ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக், செங்கடலில் தனது சொந்த கடற்படை நடவடிக்கையை நிலைநிறுத்துவது குறித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர ஆலோசனைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.

காசாவில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கும், யேமன் ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளைப் பற்றி  உரையாற்றிய பேர்பாக், செங்கடலில் தனது சொந்த கடற்படை நடவடிக்கைகள் 
 நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்.

தீவிர பேச்சுவார்த்தைகளில், எந்தெந்த நாடுகள், எவ்வளவு காலத்தில் தமது பங்கெடுப்பை உறுதிப்படுத்தும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி தனது பங்குக்கு ஹெசென் போர்க்கப்பலை அளிக்க முடிவய செய்துள்ளது.

ஜேர்மன் செய்தித்தாள், டை வெல்ட்,  கூற்றின்படி, February  பத்தொன்பது  அன்று நடக்கவிருக்கும், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தின் போது, ஒருமித்த கருத்தை எட்டுவதை, E U நோக்கமாகக் கொண்டுள்ளது.
==============
ஆட்டைத்திருடுவாங்க.. மாட்டைத்திருடுவாங்க... இந்த நாசமாப்போனவங்க   நாட்டியயே திருடிட்டாங்க. கடைசியில் தர்மம் ஜெயிக்கும், அநியாயம் அழியும்.  கொள்கை வெல்லும்.  உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டுக்கொடுக்குறவன் கோழை.  அங்கே இஸ்ரேல் 45 லட்சம் கோடி ரூபாய்கள் இழந்திருக்கு இந்தப்போர் மூலமா... பலன் அப்பாவிகளையும், குழந்தைகளையும் கொன்னதுதான்.  இவனுங்களையெல்லாம் விட்டு வைக்கவே கூடாது.  இது சொந்தக் கருத்து.

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...