மிரட்டல்களுக்குப் பணியுமா ஏமன் ஹௌதி..?
செங்கடலில் சிக்கிக்கொண்ட அமேரிக்கா, பிரிட்டன், இனி, தாக்குதல்கள் தொடர ஏமனுக்குத் தேவையான காரணம் இருக்கிறது.
பழிக்குப்பழி. மத்திய கிழக்கில் ஒரு பெரிய மோதலுக்குள் நுழையும் ஏமன்.
துருக்கி , ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், , மற்றும் ஈராக் போராளிகள் கண்டனம்.
=============
ஏமனை சேர்ந்த ஹவுதிக்கள், இப்ப official ஸ்டேட்மெண்ட் ஒன்னு ரிலீஸ் பண்ணி இருக்காங்க. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய ரெண்டு எதிரிகளும் சேர்ந்து, எங்க நாட்டுல, எழுபத்தி மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தி, அஞ்சு பேர கொன்னு, ஆறு பேரை காயப்படுத்தி இருக்காங்க. இந்த ரெண்டு எதிரிகளும் காசால இஸ்ரேல் செய்ற கொடுமைகளுக்கு, குற்றங்களுக்கு ஆதரவாக இருக்காங்க. நாஙக அவங்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் குற்றவாளி மேல நடவடிக்கை எடுக்கறோம். அதனால எங்க மேல தாக்குதல் நடத்தி, எங்களோட தலைநகர் சனாவையும், ஹுதாய்தா, தாய்ஸ், ஹஜ்ஜா அப்புறம் சஆதா பகுதிகள்ல எல்லாம் தாக்குதல் நடத்தி இருக்காங்க. இந்த தாக்குதல் நடந்ததன் காரணமா, அஞ்சு பேர் வீர மரணம் அடஞ்சிருக்காங்க, 6 பேர் காயம் பட்டிருக்காங்க. இவங்க எல்லாம் எங்களோட ராணுவப் படைகள சேர்ந்தவங்க.
-----
எங்கலோட மக்களுக்கு எதிரா, அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் எதிரிகள் நடத்திய தாக்குதலுக்கு, அவங்களே முழு பொறுப்பு ஆவாங்க. நாங்க அவங்கள தண்டிக்காம சும்மா விட்டுர மாட்டோம். எங்கள மிரட்டி தாக்குற சக்திகள் எங்கிருந்தாலும், எவ்வளவு தொலைவுல இருந்தாலும், எவ்வளவு பலம் இருக்குறவங்களா இருந்தாலும், அவங்களோட இலக்குகளை தாக்க தயங்க மாட்டோம். அந்த இலக்குகள் தரயில இருந்தாலும் சரி, கடல்ல இருந்தாலும் சரி. எங்களோட நாட்டு மக்களோட தற்காப்பு உரிமையும், சுதந்திரமும்தான் எங்களுக்கு முக்கியம்.
----
இந்த கொடூரமான தாக்குதல்கள் எங்கள நிலைகுலைய வச்சிடாது. பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்ற எங்களோட நிலையிலிருந்து பின் வாங்க மாட்டோம். அது மட்டும் இல்லாம இஸ்ரேலுக்கு போற கப்பல்கள், செங்கடல் வழியாகவும், அரபிக்கடல் வழியாகவும் போறத நாங்க கண்டிப்பா அனுமதிக்க மாட்டோம்.
எங்களுக்கு இறைவன் ஒருவனே போதுமானவன். அவனே எங்கள் பிரச்சினைகளை தீர்க்கிறவன். எங்கள பாதுகாக்குறவன், எங்கள் எமன் மக்கள் நீண்ட நாட்கள் வாழ உதவி செய்பவன். எங்க நாட்டு சுதந்திரத்துக்காகவும், எங்க மக்கள் சுதந்திரத்திற்காகவும், நாங்கள் கண்டிப்பாக போராடுவோம். அப்படீன்னு அண்ட் statementல சொல்லி இருக்காங்க.
============
ஏமன் மீதான தாக்குதலுக்கு வேதனையான பதிலடி இருக்கும் அப்டீன்னு அன்சாருல்லா அரசியல் பிரிவின் உறுப்பினர், அல்-புகைதி தெரிவித்துள்ளார்., செங்கடலில் நுழையும் நாடுகளுக்கான, கப்பல்களுக்கான புதிய விதிகளை, ஏமன் உருவாக்க முடிந்தது, இது உறுதியானது மற்றும் நிரந்தரமானது என்று அறிவித்துள்ளார். இதற்கு காரணம், சமீபத்திய ஏமன் மீதான தாக்குதல்கள்.
தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு எதிராக, ஹவுதி பழிவாங்குவதாக உறுதியளிச்சிருக்குறதுனால , ஏமனில் மில்லியன் கணக்கான மக்கள் தெருக்கள்ள குவிஞ்சு அமேரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாங்க. யேமன் மீது இங்கிலாந்தும் அமெரிக்காவும் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்கள், சுமார் நூறு ஏவுகணைகள் கொண்ட எழுபத்தி ஆறு தாக்குதல்களை செஞ்சிருந்தாங்க, இது ஒரு வரையறுக்கப்பட்ட, மற்றும் அரங்கேற்றப்பட்ட, பலத்தைக் காட்டுவதா இருந்தது. போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க, ஹவுத்திகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஸ்கை நியூஸ் அரேபியா தெரிவிச்சிருக்கு. கண்காணிப்பு நிலைகள், மற்றும் காலியான ராணுவ தளத்தை குறிவைத்து, இந்த தாக்குதல்கள் நடத்திருக்காங்க, தாக்குதல் நடந்தப்போ, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களோ, உபகாரணங்களோ அங்க இல்லன்னு சொல்றாங்க.
--------------
இஸ்ரேலுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள, கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் கட்டுப்பாடு ஒரு பெரிய பிராந்திய போரைத் தவிர்ப்பதாக பார்க்கராங்க. எண்ணெய் கிடங்குகள் மேல தாக்குதல் நடத்தப் போவதாக, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் இருக்கறதுனால, ஐரோப்பால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுருக்கு. பைடன் நிர்வாகத்தோட நடவடிக்கைகளாலே, சூயஸ் கால்வாய் மூடப்பட்டு, பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடியா, சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வெச்ச ஹௌதிக்கள், மத்திய கிழக்கில, ஒரு பெரிய மோதலுக்குள்ளாற நுழையுற சாத்தியம் இருக்குன்னு சொல்றாங்க. இஸ்ரேல் மீதான மோதல்ல, தற்போதைய கவனம் காசாவில பொதுமக்களை பாதிக்குற அதே நேரத்தில, கடுமையான இராணுவ மற்றும் பொருளாதார சேதத்தயும் ஏற்படுத்துது.
------------
அமெரிக்காவும் இங்கிலாந்தும் செங்கடலை 'இரத்த கடல்' ஆக மாற்ற முயற்சிக்கின்றன, அப்டீன்னு துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கண்டனம் தெரிவிச்சிருக்காரு.
Hagueவில இருக்குற சர்வதேச நீதிமன்றத்தில நீதி கெடக்யூம்னு நாங்க நம்புகிறோம், அது இஸ்ரேல கண்டிக்கும் அப்டீன்னும் நாங்க நம்புறோம்.
துருக்கி இஸ்ரேலைக் கண்டிக்குற ஆவணங்கள ஒப்படச்சு, ஒடுக்கப்பட்டவங்க ஒருபோதும் தோற்கல, மாறா ஒடுக்குமுறையாளர்கள்தான் நஷ்டமடையறாங்க " அப்டீன்னும் துருக்கி தெரிவிச்சிருக்காங்க.
-----------------மிஸ்க்-----------
மேற்குக்கரையில் உள்ள 'அடோரா' குடியிருப்புக்குள் ஊடுருவிய போராளிகள்.இந்த குடியிருப்புக்குள் ஊடுருவிய மூன்று போராளிகள், இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக கூறப்படுவதை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மறுத்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவின் வழக்கின் அடிப்படையை அவரது நாடு நிராகரிக்கிறது, தென்னாப்பிரிக்காவின் தரப்பில் இது உண்மை அடிப்படையிலானது மற்றும் கட்டாயமானது என்று விவரிக்கப்பட்டது.
ஜேர்மனிய அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தில் மூன்றாம் தரப்பினராக இணையப்போவதாக அறிவித்து, இஸ்ரேலை ஆதரிப்பதோடு, "குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று வாதிடுகிறது.
ஜேர்மனியின் அறிக்கை, காசாவில், இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை ஆதரிக்கும் அதன் நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதாக உள்ளது.
பாலஸ்தீனிய மேற்குக் கரை மக்கள், சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஆதாரங்களை வழங்குவதற்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல், மேற்குக் கரைக்கான சில அத்தியாவசிய பொருட்கள்
வழங்கலை நிறுத்தி வைக்கலாம் என்று பாலஸ்தீன அறிக்கைகள் கூறுகின்றன என்று உள்ளூர் செய்தியாளர் முஹம்மத் நஜிப் தெரிவிக்கிறார்.
-------------
அமேரிக்கா ஏமன் நிலைகள் மீது மீண்டும் தாக்குதல்.
ஏமன்ல, ஹவுத்திகளின் திறனை குரைக்கிரதுக்காக, அமெரிக்கா மறுபடியும் தாக்குதல் நடத்தியிருக்குன்னு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவிச்சிருக்காங்க.
ஏமன்ல, கிட்டத்தட்ட முப்பது இடங்கள்ல, தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் கூடுதல் தாக்குதலை நடத்தி இருக்கு. இந்த தாக்குதல்கள் செங்கடலில் கப்பல்களை குறிவைக்கும் ஹவுத்திகளின் திறனைக் குறைப்பத நோக்கமாகக் கொண்டுள்ளன அப்டீன்னு, பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஒரு செய்தி நிறுவனத்திடம் தெரிவிச்சிருக்காங்க. அதனால இது தொடர்பான தொடர்பான கூடுதல் விவரங்கள வெளியிடவில.
-----------------
நேற்று இஸ்ரேலுக்கு மிகவும் கடினமான நாள். உண்மையில், போர் தொடங்கியதிலிருந்து, இராஜதந்திர மட்டத்தில், மிகவும் கடினமான நாட்களில் இதுவும் ஒன்றாகும், அதை மறுப்பதில் அர்த்தமில்லை,
இந்த சூழ்நிலையில், இஸ்ரேல் ஏற்கனவே தோற்றுவிட்டது. "இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததா?" என்ற விவாதம், சர்வதேச கவனம், மற்றும் ஊடக விவாதம் தொடங்கியதும், இஸ்ரேல் வரலாறு காணாத அளவுக்கு, கூனிக்குறுகிப்போய் கேவலப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க ஆவணம் சுத்தமாகவும், உண்மைகள் மற்றும் மேற்கோள்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
இந்த விவாதங்கள்தான் ஆறுதலாக உள்ளன. ஆனால், முடிவுகள், இஸ்ரேல் விரும்பிய படிதான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இல்லையென்றால், அது வீட்டோ செய்யப்படும். அது மட்டுமல்ல, உலக மீடியாக்கள் அனைத்தும் செய்திகளை இருட்டடிப்பு செய்து, இஸ்ரேல் செய்ததுதான் மிகமிகச்சரியானது, இந்த சர்வதேச நீதிமன்றம் ஒரு சாராரிடம் விலை போய்விட்டது என்று இட்டுக்கட்டி விடுவார்கள் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.
அடுத்து நாம் மீண்டும் விரைவில் சந்திக்கலாம், நன்றி.
No comments:
Post a Comment