Friday, 19 January 2024

முக்கியச் செய்திகள் அமெரிக்க கப்பலை தாக்கிய ஹவுத்தி அமெரிக்கா ஐந்...


மத்திய கிழக்கு நெருக்கடி நேரலை: ஏடன் வளைகுடாவில், மற்றொரு அமெரிக்க கப்பலை குறிவைத்த,  ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்! ஏமனுக்குள், அமெரிக்கா, ஐந்தாவது சுற்று தாக்குதலை தொடங்கியது.

முக்கியச் செய்திகள் - அமெரிக்க கப்பலை தாக்கிய  ஹவுத்தி -   அமெரிக்கா ஐந்தாவது சுற்று தாக்குதல் 

ஏடன் வளைகுடாவில், செம் ரேஞ்சர் கப்பல் மீது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் புதிய தாக்குதல்; ஏவுகணைகள் தண்ணீரில் மோதியதால், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். சேதங்கள் மறைக்கப்படுகிறதா?

நாங்கள் ஈரானைத்  தாக்குகிறோம்.. நெதன்யாஹூ பேச்சின் முழு விவரம்.

======

குண்டுவீச்சு தாக்குதல்களை நிறுத்தவில்லை என்பதை, ஜோ பைடன் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, ஐந்தாவது தாக்குதலை நடத்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதியை கிண்டல் செய்த ஹவுத்தி தலைவர், இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார், 

இதையடுத்து, ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்கள் தொடரும், என்று பைடன் செய்தியாளர்களிடம் கூறுகிறார்.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தகவல்படி, அமெரிக்க போர் விமானங்கள் "தெற்கு செங்கடலை இலக்காகக் கொண்டு, ஏவத்தயாராக இருந்த", கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை, வீ சித்தாக்கின.

ஆனால் வாஷிங்டன் டி.சி.யில், செய்தியாளர்கன் பேசும்போது, அமெரிக்க ஜனாதிபதி,  அமெரிக்க வான்வழித் தாக்குதல்களின் செயல்திறன் குறித்து வெளிப்படையாக இருந்தார். எங்களது தாக்குதல்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை நிறுத்துமா என்று தெரியவில்லை.  ஆனாலும், நாங்கள் தாக்குகிறோம்? ஆம் நாங்கள் தாக்குகிறோம்.." என்றோ தெரிவித்திருக்கிறார்,

=====

ஈரான் மீது இஸ்ரேல், ஏற்கனவே நேரடித் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், தெஹ்ரான் அணுவாயுதத்தை அடைவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

வியாழன் அன்று, டெல் அவிவில், செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த நெதன்யாகு,  ஈரான் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்துவதற்கு பதிலாக, ஈரானின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்துகிறது, 

காசாவிற்கு அருகே, ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில், சுமார்  ஆயிரத்து இருநூறு  பேர் கொல்லப்பட்டனர். மற்றும் ஏராளமானோர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டபோது, ​​அக்டோபர் ஏழு  தாக்குதல்களுக்கு, சதித்திட்டம் தீட்டியதில், ஈரான் ஈடுபட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் அரசாங்கத்தின், சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, இஸ்ரேல், பாலஸ்தீனிய பகுதி மீது தீவிர இராணுவ குண்டுவீச்சைத் தொடுத்ததன் மூலம் பதிலடி கொடுத்தது, இந்தத்தாக்குதல்களால், இதுவரை, சுமார் இருபத்து நாலாயிரம்  பேர் இறந்துள்ளனர். இந்த நடவடிக்கை, ஹமாஸை  அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று இஸ்ரேல்  கூறுகிறது.

"paணம், பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு" மற்றும் உளவுத்துறை மூலம், ஹமாஸுக்கு ஈரான் உதவுவதாக, இஸ்ரேல் முன்பு வெளிப்படையாக குற்றம் சாட்டியது.

ஹமாஸுக்கு pinனால் ஈரான் நிற்கிறது. நாங்கள் ஈரானுடன் மோதலில் இருக்கிறோம். எங்களை அழிக்க ஈரான் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டாம், ”என்று நெதன்யாகு கூறினார், காசா முழுவதும்,  பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வழங்கும் ஒப்பந்தத்திற்கு மட்டுமே தான் உடன்படுவேன் என்று கூறினார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் எந்தப் பங்கையும் ஈரான் மறுத்துள்ளது, ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி இத்தகைய குற்றச்சாட்டுகள் "அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை" என்று கூறினார்.

நெதன்யாகு மேலும் கூறுகையில், "ஈரான் ஆக்டோபஸின் தலைவர், ஹூதிகள் முதல் ஹிஸ்புல்லா மற்றும்  ஹமாஸ் வரை, அதன் கூடாரங்கள என்கிறார்.

----------

ஈரான், பரவலாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கில், பாதுகாப்பு இல்லாத நிலை உருவாக்குவதில், முக்கிய சக்தியாக உள்ளது, காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு, ஆயுதங்கள், இராணுவ நிபுணத்துவம் மற்றும் பயிற்சி அனைத்தையும் ஈரான் அளித்ததாக கூறுகிறது.

செங்கடலில், வணிகக் கப்பல்கள் மீது, ஹூதிகள் நடத்திய தாக்குதலில், ஈரான் "ஆழமாக ஈடுபட்டுள்ளது" என்று, அமெரிக்கா முன்பு குற்றம் சாட்டியது. தெஹ்ரான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது, "எதிர்ப்புக் குழுக்கள்" சுதந்திரமாகச் செயல்படுவதாகவும், "இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை எதிர்கொள்ள, தெஹ்ரானிடம் இருந்து உத்தரவுகளைப் பெறவில்லை" என்றும் வலியுறுத்துகிறது.

ஈரானை நேரடியாக தாக்குவதை, இஸ்ரேல் பகிரங்கமாக ஒப்புக்கொள்வது இல்லை, ஆனால் இஸ்லாமிய குடியரசு, நீண்ட காலமாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியின் போது பலமுறை இலக்காக இருந்ததுள்ளது.

டிசம்பரில், இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி நஃப்தலி பென்னட், ஈரானில் உள்ள ஆளில்லா வான்வழித் தளத்தை இஸ்ரேல் தாக்கி, மூத்த இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படைத் தளபதியை படுகொலை செய்ததை வெளிப்படுத்தினார். ஜூன்  இரண்டாயிரத்து இருபத்து ஒன்று  முதல் ஜூன் இரண்டாயிரத்து இருபத்திரண்டு  வரை இஸ்ரேலிய பிரதமராக இருந்த பென்னட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு பதிப்பில் ஒப்புக்கொண்டார்.

சரி   இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கே முக்கியமாக நாம் கவனிக்க  வேண்டியது, இஸ்ரேல் ஈரானை தாக்கியதா? தாக்கிக்கொண்டிருக்கிறதா? தாக்கப்போகிறதா?

 நேரடியாக  அறிவித்து விட்டு பின் தாக்குக்கி                                                                                                                                                                               

\-----------------                                                                                                                                                                                         

இனி, முக்கிய செய்தித்துளிகள்:.

வடக்கு காஸாவுக்கு வருகின்ற,  எழுபது  சதவீதமான  உதவிப் பொருட்களை அனுப்ப, இஸ்ரேல் அனுமதி மறுக்கிறது என்று  ஐ.நா சபை தெரிவிக்கிறது. 

ஜனவரி முதல் பகுதியில், வடக்கு காசா பகுதிக்கு வந்த , இருபத்தொன்பது மனிதாபிமான உதவித் திட்டங்களில், ஏழுக்கு மட்டுமே இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததாகவும், அப்பகுதிக்கு எரிபொருள் மற்றும் மருந்து விநியோக முயற்சிகளில், தொண்ணூற்று ஐந்து சதவீதத்தை இஸ்ரேல் மறுத்ததாகவும், ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

சுதந்திர பாலஸ்தீன அரசுக்கு எதிராக இஸ்ரேலிய பிரதமர் வலுவான நிலைப்பாட்டை எடுத்த பின்னர், இருதரப்பு தொலைபேசி அழைப்பின் போது நெதன்யாகு இரண்டு அரசு தீர்வை "எதிர்க்கவில்லை" என்று பைடன் கூறுகிறார்.

காசாவில், இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துமாறு, மெக்சிகோ மற்றும் சிலி நாடுகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் வேண்டுமென்றே போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான, எந்த ஆதாரமும் இல்லை என்று, அமெரிக்க அதிகாரி ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

காசாவில், இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்டவர்களைத் தான் சந்தித்ததாக, ஐ.நா மனித உரிமை அதிகாரி கூறுகிறார்.

அக்டோபர் ஏழு  முதல், காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில், குறைந்தது  இருபத்து நாலாயிரத்து எழுநூற்று அறுபத்திரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் அறுபத்து இரண்டாயிரத்து நூற்று எட்டு பேர் காயமடைந்தனர்.

 அக்டோபர் ஏழு  ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை  ஆயிரத்து நூற்று முப்பத்தொன்பது  ஆக உள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,. இஸ்ரயேலின் இறப்புகள், பல ஆயிரங்கள்  இருக்கக்கூடும், என்று சந்தேகிக்கப்படும் நிலையில், இஸ்ரேல் தங்களது உயிர் இழப்புகளை, பல மாதங்களாக மறைத்து வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்தித்துளிகள், வீடியோவின் இறுதிப்பகுதியில்...

இந்த நிலையில் மத்திய கிழக்குக்கு சிறிதும் தொடர்பு  இல்லாத, இஸ்ரேல், அமேரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள்,  மத்தியக்கிழக்கை குறிவைத்து, நாடுகளுக்குள் பிரிவினையையும், பிளவையும் ஏற்படுத்தி, நியாயமற்ற தடைகள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலமாக, நிம்மதியின்மையை  ஏற்படுத்தி, மக்களை அழிக்கின்ற கொடூரங்களுக்கு எதிராக, மக்கள் சுதந்திரமாக சிந்திக்க ஆரம்பித்துள்ளனர் என்று, வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

மேலும், மத்தியக் கிழக்கில் உள்ள கச்சா என்னை வளங்களை, நிரந்தரமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்தும், தந்திரமாக அந்த வளங்களை சுரண்டிச்செல்ல, பல இட்டுக்கட்டுகளை பரப்பி, பாதுகாப்பு அளிக்கிறோம் என்னும் பெயரில், மத்தியகிழக்கு முழுவதும் ராணுவமயமாக்கப் படுவதும், அவ்வாறு ஊடுருவும் ராணுவத்தின் ஆயுதங்கள், அந்தப் பகுதி மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, அவர்களை அழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை, உணர ஆரம்பித்திருக்கிறார்கள், என்று நுன்னுரையிடம்  ஐரோப்பாவிலுள்ள ஒரு Think Tank கருத்து தெரிவித்திருக்கிறது. 
















ற 


No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...