அடுத்த சில மணி நேரங்களில் ஈரானைத் தாக்கப்போகும் பைடன். SKY News தகவல்.
USS Gravely Destroyer போர்க்கப்பல் மீது ஏமன் சரமாரி தாக்குதல்.
ஈரானைத் தாக்கினால்... சீனா ரஷ்யா கடுமையான கூட்டு எச்சரிக்கை..
ஹமாஸ் 117-வது நாளாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்து வருகிறது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு, சிரியாவுக்கு முதல் தூதரை அனுப்பியது UAE.
இரண்டு வாரங்களாக கடல்நீரை சுரங்கப்பாதைகளுக்குள் செலுத்தும் இஸ்ரேல்.
சற்றுமுன் ஈராக்கின் ஏர்பிளில் மீண்டும் ஒரு ட்ரான் தாக்குதல். மத்தியக் கிழக்கில் சின்னாபின்னமாகும் அமேரிக்கா.
------------
பைடன் அடுத்த சில மணி நேரங்களில் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்குவார் என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. இது உண்மைலேயானால், மத்தியக்கிழக்கில் மட்டுமல்ல, மேலும் உலகின் பல இடங்களிலும் பூகம்பம் வெடிக்கப்போவது உண்மையாகிவிடும் என்கிறார்கள்.
அமெரிக்காவிலும் பல கடும்போக்குவாதிகள், ஈரானுக்குள் ஆழமாக சென்று தாக்க அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். அமெரிக்க தேர்தல் களத்தில், பைடேன் பின்னுக்கு தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், இந்தத்தாக்குதல் நடைபெற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இன்றிரவு ஜோ பைடன் ஈரானைத் தாக்கினால், இந்த தேதி நீண்டகால வரலாற்றில் நினைவில் வைக்கப்படும் என்கிற கூற்று உண்மையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
------
செங்கடலில் ஏமன் கடற்கரைக்கு அருகே அமெரிக்க கடற்படை போர்க்கப்பலை நோக்கி ஏமன் கடற்படை பிரிவுகள் "பல" ஏவுகணைகளை வீசியதாக யேமன் இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி புதன்கிழமை ஏமன் தலைநகர் சனாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில், யுஎஸ்எஸ் கிரிட்லி நாசகாரி கப்பலுக்கு எதிராக யேமன் படைகள் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறினார்.
காசா பகுதியில் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் எதிர்ப்புப் போராளிகளுக்கு ஆதரவாகவும், யேமனுக்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டு ஆக்கிரமிப்புக்கு விடையிறுப்பாகவும் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் ஆதரவு குழு செங்கடலில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தும் நிலையில், இனியும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.
-------------
ஈரான் போரை நாடவில்லை, ஆனால் அது அதைக் கண்டு பயப்படவில்லை என்று இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் (ஐஆர்ஜிசி) தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.
ஜோர்டானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பைடென் கூறினார். பைடேன் இந்தக் கூற்றுக்கு சீனாவும் ரசியாவும் இணைந்து கடுமையா கூட்டு எச்சரிக்கையை பைடெனுக்கு அனுப்பி உள்ளது. ஈரான் தாக்கப்பட்டால் அதன் விளைவுகள் படு பயங்கரமானதாக இருக்கும் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
------
கடந்த இருபத்து நன்கு மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சு அல்லது துப்பாக்கிச் சூட்டில் நூற்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள சுரங்கப்பாதைகளை பல வாரங்களாக கடல் நீரால் நிரப்பி வருவதை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த கடல் நீர், அடுத்த பல வழிகளில் திருப்பிவும் கடலுக்குள்ளேயே செல்வது தெரியாமல் இஸ்ரேல் கூத்தைத் தொடர்கின்ற கோமாளிகள் என்று சிலர் வருணிக்கிறார்கள்.
மேலும், நிலத்தடி சுரங்கப்பாதை நெட்வொர்க்கை கடல் நீரால் நிரப்ப பம்புகளை அமைத்ததாக இஸ்ரேலிய படைகள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டன.
இந்த நடவடிக்கை காசாவின் முழு நீர் விநியோகத்தையும் மாசுபடுத்தி, அதை குடிக்க முடியாததாக மாற்றும் ஒரு மிகப்பெரிய போர்க்குற்றமாகும்.
---
ஈராக்கின் எர்பிலின் வடகிழக்கில் அமைந்துள்ள அல்-ஹரிரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது மற்றொரு கமிகேஸ் ட்ரோன் தாக்குதல் பதிவாகியுள்ளது
மத்திய கிழக்கில் யாரும் இனி அமெரிக்காவைக் கண்டு அஞ்சவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது
-----------
No comments:
Post a Comment