Wednesday, 15 October 2025

WORLD IN FLAMES! Gaza, Ukraine, India, Iran – Truth Unleashed! The world...


காசா கொடூரம், உக்ரைன் அரசியல், Google AI Hub – உலகம் பதறும் 5 அதிரடி செய்திகள்!

Description :

இன்றைய உலக அரசியல், தொழில்நுட்ப, மற்றும் மனிதநேயம் சார்ந்த ஐந்து  முக்கிய செய்திகள்.

காசா அழிவுக்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தில் நிற்க வேண்டும் என்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கூறியுள்ளதும், 

“இனி உலகம் உக்ரைன்-ரஷ்யா போரையே கவனிக்கும் என்று, Zelensky மகிழ்ச்சிஅடைந்திருப்பதும்,

ஏ ஐ தொழில் நுற்பத்துக்கான, கூகுள் நிறுவனத்தின் பதினைந்து பில்லியன் அளவினான முதலீட்டை, இந்தியா ஏன் வரவேற்கிறது? ஐரோப்பா ஏன் எதிர்க்கிறது என்பதற்கான காரணமும்,

சமாதானம் பேசும் அமெரிக்க ஜனாதிபதியை நம்ப முடியாது என்று, ஈரான் காட்டமாகக் கூறியிருப்பதும், 

கைதிகளை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதற்கான காரணம், இஸ்ரேல் ஏற்படுத்திய அழிவுகள்தான் என்று, ஹமாஸ் கூறியிருப்பதும் இந்தத் தொகுப்பில் அடங்கும்.

இந்த வீடியோவில், உலகம் பதறவைக்கும் அரசியல், தொழில்நுட்ப, மனிதநேயம் சார்ந்த உண்மைகளை நாங்கள் பகிர்கிறோம். Subscribe செய்ய மறக்காதீர்கள்.


Content  1:

காசா கொடூரங்களை மறக்கக்கூடாது. காசா அழிவுக்கு  பொறுப்பானவர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் சமீபத்தில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர்நிறைவு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியது:

போர்நிறைவு என்பது, நடந்த கொடூரங்களை மறக்க வேண்டியதற்கு அல்ல. காசாவில் நடந்த  அழிவுகளுக்கு பொறுப்பானவர்கள், நீதிமன்றத்தில் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அவரது கருத்து, மனிதநேயம் மற்றும் நீதியின் இடையே சமநிலை வேண்டும் என்பதாகும். இது ஐரோப்பிய அரசியல் வட்டத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் இதற்கு கடுமையாக பதிலளித்து, சில ஸ்பெயின் அமைச்சர்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

----

Content  2:

மீண்டும் உக்ரைன் ரஸ்சியா போர் அரசியல். சந்தோசத்தில் துடிக்கும் Zelensky. 

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான, சமீபத்திய போர்நிறைவு ஒப்பந்தம் மூலமாக, காசா கமக்கள் மகிழ்ச்சியில் அடைகிறார்களோ இல்லையோ, zelensky மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார். உலகத்தின் கவனத்தை மீண்டும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு திருப்பும் என, உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் கூறியது:

இஸ்ரேல் காசா போர்நிறைவு ஒரு முக்கிய முன்னேற்றம். இதுபோன்ற முயற்சிகள் மற்ற போர்களையும் முடிவுக்கு கொண்டு வரலாம். இப்போது உலகம் உக்ரைனின் போரையும் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆயினும், இனி மீண்டும் தனது பெயர் உலக தலைப்புச் செய்திகளில் வலம் வருவதுடன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயுதங்களும், பணமும் தன்னிடம் வந்து குவியும் என்னும் நம்பிக்கையில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

----

Content  3:

google நிறுவனம்,  கிட்டத்தட்ட பதினைந்து பில்லியன் அளவிலான முதலீட்டில், இந்தியாவில் மிகப்பெரிய தகவல் மையத்தை நிறுவுவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற DATA CENTERகளை ஐரோப்பா எதிர்த்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நிறுவ அனுமதி கொடுத்ததால், பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.   

இந்தியா ஏன் வரவேற்கிறது?

இந்தியா வளர்ச்சி மற்றும் நீண்டகால முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது:

  • Digital India திட்டத்தின் கீழ் A I, Cloud, Fiber போன்ற உள்கட்டமைப்புகள் விரிவாக்கம்.

  • பணியிடங்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி. விசாகப்பட்டினத்தை மையமாகக்கொண்டு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

  • பசுமை சக்தி: Google, Adani, Airtel கூட்டாக இணைந்து, renewable powered compute என்னும் பசுமை சக்தியை உருவாக்குகின்றனர்.

  • உலகளாவிய A I தலைமை. இந்தியா, A I யுகத்தில் முன்னிலை வகிக்க விரும்புகிறது.

  • Subsea Gateway. புதிய cable landing மூலம் உலகளாவிய data connectivity மேம்படும்.

Google C E O சுந்தர் பிச்சை கூறும்போது, இது அமெரிக்காவுக்கு வெளியே, நாங்கள் செய்த மிகப்பெரிய முதலீடு. இந்தியாவின் கனவுக்கு இது ஒத்துப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.

சரி, ஐரோப்பா ஏன் எதிர்க்கிறது?

பல ஐரோப்பிய நாடுகள் பெரிய டேட்டா சென்டர்களை தடைசெய்து அல்லது கட்டுப்படுத்தி வருகின்றன, காரணங்கள்:

  • சுற்றுச்சூழல் கவலைகள்: டேட்டா சென்டர்கள் மின்சாரம் மற்றும் நீரை அதிகம் பயன்படுத்துகின்றன. நெதர்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் grid overload காரணமாக திட்டங்களை நிறுத்தியுள்ளன.

  • நிலம் மற்றும் நகரமைப்பு: பெரிய அளவிலான உள்ளூர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அதனால் பல சிரமங்கள் ஏற்படுத்தப்பட்டு, நகர் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படலாம்.

  • டிஜிட்டல் சுனாமித்துவம்: ஐரோப்பிய நாடுகள், வெளிநாட்டு tech நிறுவனங்களின் ஆதிக்கத்தை உள்ளூரில் கட்டுப்படுத்த விரும்புகின்றன.

  • மின்சாரத் தட்டுப்பாடுகளிலிருந்து உள்ளூர் மக்கள் மற்றும் தொழிற்சாலைகளை காப்பதற்காகவும், இதற்கு அனுமதி மறுத்து  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

--

Content 4:

கொலையாளிகளின் பக்கம் நின்றுகொண்டு, சமாதானம் பேசும் அமெரிக்க ஜனாதிபதியை நம்ப முடியாது என்று, ஈரான் காட்டமாகக் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் மீது வைக்கப்பட்டுள்ள, அராக்சியின் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால்.,

  • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்.

  • அவரால்  இஸ்ரேலின் தாக்கத்தை குறைக்க முடியவில்லை; அதனால் போர்க்களவாதிகளுக்கு ஆதரவு அளிக்கிறார். அவர்களைப் புகழ்ந்து பேசுகிறார். மேலும், 

  • சமாதானத்தின் தலைவர் என்ற பெயரை வெறுமனே பயன்படுத்த முடியாது, என்றார் அராக்சி.

  • ஈரான், அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சிக்கிறது: சமாதானம் பேசுவது ஒருபக்கம், ஆனால் போரை ஊக்குவித்து, பேரம் பேசுவது  த்தை ஊக்குவிப்பது மற்றொரு பக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

---

Content 5:

பிணையக்கைதிகளை ஒப்படைப்பதில் தாமதம் ஏன்? ஹமாஸ் காட்டமான விளக்கம்.

இஸ்ரேலின் கட்டுப்பாடில்லாத அழிவுகள் காரணமாக, காசாவில் சிக்கியுள்ள கைதிகளின் உடல்களை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுகிறது."

தற்போது நிலைமை எப்படி இருக்கிறது?

  • ஹமாஸ் தரப்பின் தகவலின்படி, பத்தாயிரக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள், இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்.

  • இதே இடங்களில் இஸ்ரேலிய மற்றும், வெளிநாட்டு கைதிகளின் உடல்களும் இருக்கலாம்.

  • இதை கண்டுபிடிக்க, நேரமும் முயற்சியும் தேவைப்படுகின்றன என ஹமாஸ் கூறுகிறது.

  • இதுவரை நான்கு கைதிகளின் உடல்கள் மட்டுமே இஸ்ரேலுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

  • இருபத்து நான்கு குடும்பங்கள், இன்னும் தங்கள் உறவினர்களின் உடல்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  • ரஃபாஹ்  எல்லை திறக்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது, இதற்கும் இந்த நிலைமை காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

----

உலகம் இன்று பல்வேறு சிக்கல்களில் சுழல்கிறது — காசாவின் அழிவுகள், உக்ரைன்-ரஷ்யா போர், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடுகள், மற்றும் பிணையக்கைதிகளின் துயரம்.

இந்தச் செய்திகளைப் புரிந்து கொள்ளும் போது, நாம் மனிதநேயம், நீதிமுறை, வளர்ச்சி, மற்றும் உண்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.

நாம் பேச வேண்டும். நாம் கேட்க வேண்டும். நாம் கேட்கப்பட வேண்டும்.

இது உங்கள் குரல். இது உங்கள் பார்வை. இது உங்கள் உலகம். அடுத்த வீடியோவில் சந்திப்போம். 

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...