டிரம்ப் சூழ்ச்சி – Katz எச்சரிக்கை: ஹமாஸ் வீழ்ச்சி, புடின் தோல்வி!"
Trump’s Gameplan – Katz Warns: Hamas Collapse, Putin’s Summit Shame!
---
🌍 உலக அரசியல் ஒரு திருப்புமுனையில்! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Katz, ஹமாஸ் அமைப்பை முற்றாக வீழ்த்தும் திட்டத்தை IDF-ஐக் கொண்டு தயாரிக்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ceasefire தோல்வியடைந்தால், இஸ்ரேல் மீண்டும் போருக்கு திரும்பும் என CNN-இல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே நேரத்தில், ரஷ்ய அதிபர் புடின், அரபு உச்சிமாநாட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தார் — காரணம், அரபு தலைவர்கள் வரவில்லை!
🔴 ஹமாஸ் இறந்தவர்களின் உடல்களை திருப்பி அனுப்ப தவறியது.
🔴 காசா-எகிப்து எல்லை மூடப்பட்டது.
🔴 புடின் அரபு உச்சிமாநாட்டை ரத்து செய்தது.
🔴 பலஸ்தீன உடல்களில் சித்திரவதை அடையாளங்கள் காணப்பட்டது.
🔴 Trump–Netanyahu சமாதான ஒப்பந்தம் எதிர்ப்பு. என்று,
இந்த வீடியோவில், இந்த அனைத்து முக்கிய செய்திகளையும் பகிர்கிறோம். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பகிருங்கள்!
👉 Subscribe செய்ய மறக்காதீர்கள் 👉 Like & Share for awareness 👉 🔔 Bell icon-ஐ கிளிக் செய்யுங்கள். செய்திகள் தொடர்கின்றன..
----
cease fire தோல்வியடைந்தால், அல்லது ஹமாஸ் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால், மீண்டும் போர் துவங்க IDF தயாராக இருக்க வேண்டும்என்று கட்ஸ் தெறிவித்திருக்கிறார். இதற்கான திட்டத்தை தயாரிப்பதற்காக, IDF தலைமை அதிகாரி லெ.ஜென் மற்றும், ஐயல் ஸமிர் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஹமாஸிடம் பிணமாக உள்ளவர்களை மீட்பது , ஹமாஸ் ஆயுதங்களை முழுமையாக அகற்றுவது, அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படை மூலம் சுரங்கங்களை அழிப்பது, மேலும், இதற்கு ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை என்றால், இஸ்ரேல் மீண்டும் போர் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் எதிர்த்தால், காசா இராணுவம யமாக்கப்படுவதையும், இனி இஸ்ரேலுக்கு ஒரு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து, இஸ்ரேல் மீண்டும் சண்டையிடும் என்று Katz எச்சரித்தார்.
இது இப்படி இருக்க, புதன்கிழமை இரவு செஞ்சிலுவைச் சங்கத்திடம், மேலும் இரண்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எங்களால் அணுக முடிந்த அனைத்து பணயக்கைதிகளின் உடல்களும், இப்போது இஸ்ரேலிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக, ஹமாஸ் அறிவித்துள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, திங்கட்கிழமைக்குள் இருபத்தெட்டு உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டிய போதிலும், இதுவரை மொத்தம் ஒன்பது உடல்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
---
இது தொடர்பான தற்போதைய முக்கிய முன்னேற்றங்களில்,
இறந்தவர்களை தேடுதல் தொடர்பான, குறிப்பிடத்தக்க முயற்சிகள் இல்லாமல், மீதமுள்ள பத்தொன்பது உடல்களை மீட்டெடுக்க முடியாது என்று ஹமாஸ் கூறுகிறது. காசாவின் சில பகுதிகளை அணுக முடியாத சூழ்நிலை இருப்பதாலும், இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளால் காசா கட்டமைப்பு சேதம் அடைந்திருப்பதாலும், இறந்தவர்களைக் கண்டுபிடிக்க சிறப்பு உபகரணங்கள் தேவைப்படும் நிலை இருப்பதாலும், தேடல்பணிகள் தொய்வடைந்திருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இஸ்ரேலிடம் உடல்களை ஒப்படைத்தபோது , நான்கு சவப்பெட்டிகள் இருந்தன, ஆனால் அதில் ஒன்று, அறியப்பட்ட எந்த பணயக்கைதிகளுடனும் பொருந்தவில்லை, இது, இறந்தவர்களை அடையாளம் காண முடியாத நிலையையும், மற்ற உடல்கள் எந்த நிலையில் உள்ளன என்பதைக் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக்க கூறப்படுகிறது..
---
மனிதாபிமான உதவியை தாமதப்படுத்துவதன் மூலமும், ரஃபா எல்லையைக் கடக்க அனுமதிக்காமல் மூடி வைத்திருப்பதன் மூலமும், ஹமாஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற, இஸ்ரேல் தற்போது அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த காரணங்களால், காசா மற்றும் இஸ்ரேலுக்கான போர்நிறுத்தம் கேள்விக்குறியாகி உள்ளது.
எதிர்பாராத இந்த திருப்பம், பலவீனமான, அமைதி ஒப்பந்த செயல்பாட்டில், ஒரு முக்கிய புள்ளியாக மாறியுள்ளது, அனைத்து இஸ்ரேலிய உடல்களையும் திருப்பி அனுப்பத் தவறினால், மீண்டும் இராணுவதாக்குதலைத் தொடங்குவோம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர் நிறுத்தம் முறிந்தால், ஹமாஸை தோற்கடிக்க ஒரு விரிவான திட்டத்தை தயாரிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், ஏற்கனவே ஐ.டி.எஃப்-ஐ கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
---
ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால், இஸ்ரேலியப் படைகள் மீண்டும் சண்டையிட, அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன், இஸ்ரேல் காசாவின் தெருக்களுக்குத் திரும்பும், என்று டிரம்ப் சீஎன்னென் இடம் கூறினார்.
ஹமாஸ் இன்னும் அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பாததால், உதவிப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகள், நுழையக் காத்திருக்கும் காசா மற்றும் எகிப்து இடையேயான எல்லையை மூடிவிட்டு, போரை மீண்டும் துவக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகக் அறிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் இறந்த பாலஸ்தீனியர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. புதன்கிழமை மாலை, காசாவில் உள்ள தடயவியல் குழுக்கள், இஸ்ரேலியர்களால் ஒப்படைக்கப்பட்ட பல உடல்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகக் கூறின. மற்றவை சிதைந்ததாகவோ, அல்லது எரிந்ததாகவோ தோன்றின, சிலவற்றில் கைகால்கள் அல்லது பற்கள் இல்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது..
காசாவின் தெற்கு மூலையில் உள்ள கெரெம் ஷாலோம் checkpost வழியாகவும், பிற checkpost வழியாகவும், மனிதாபிமான உதவிகள் இன்னும் காசா பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில், நாட்டின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்ட, இஸ்ரேலிய இராணுவ நிறுவனமான கோகாட் இவ்வாறு கூறியுள்ளது.
---
டிரம்பின்சூழ்ச்சிக்கு விலைபோன அரபுக்கள். ரஷ்ய அதிபர் வ்லாதிமிர் புடின், அரபு உச்சி மாநாட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்தார், காரணம், அரபு தலைவர்கள் யாரும் வரவில்லை. இந்த உச்சி மாநாடு, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், அக்டோபர் பதினைந்தாம் தேதியன்று நடைபெற திட்டமிடப்பட்டது, ஆனால், சவூதி, எகிப்து, ஐக்கிய அரேபிய அமீரகம் போன்ற முக்கிய நாடுகள் பங்கேற்பை உறுதிப்படுத்தவில்லை.
இந்த மாநாட்டில் பங்கேற்பதாக இருந்த இருபத்திரண்டு அரபு தலைவர்களில், சிரியா மற்றும் அரபு லீக் மட்டுமே பங்கேற்பை உறுதி செய்தனர்.
மற்றொருபுறம், அமெரிக்கா மற்றும் டிரம்ப் முன்னெடுத்த அமைதி முயற்சிக்கு எதிரான ரஷ்யாவின் ஆதரவை காட்ட வேண்டும் என்பதற்காக, மாஸ்கோ உச்சிமாநாடு திட்டமிடப்பது என்றும், மாநாடு ரத்து — ரஷ்யாவின் மத்திய கிழக்கு தாக்கம் குறைந்து வருகிறது என விமர்சனங்களும் எழுந்துள்ளது. டிரம்ப் நெதன்யாஹுவுடன் இணைந்து, வெளியிட்ட சமாதான ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று ஈரான், ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
---
உலகம் பதற்றத்தில் இருக்கிறது… உங்கள் கருத்து என்ன? கீழே comment செய்யுங்கள். Like, Share, Subscribe செய்யுங்கள் – உங்கள் ஆதரவே எங்கள் பலம்! நன்றி.
--
No comments:
Post a Comment