Saturday, 4 October 2025

Trump Gaza Plan approved by Hamas. Is Gaza falling? Or is the door to vi...


Trump Gaza Plan  - ஹமாஸ் ஒப்புதல். காசா வீழ்கிறதா? அல்லது வெற்றியின் வாசல் திறக்கிறதா?.

இருவது அம்ச திட்டத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்.  காசா வீழ்ந்ததா? அல்லது அமைதியின் வாசல் திறக்கிறதா? வாங்க, ஒரு முழுமையான அலசல, அலசிப்பாத்துறலாம்.

 நண்பர்களே. இரண்டு வருடங்களாக தொடரும், காசா படுகொலைக்கு முடிவு காண்பதற்கான டிரம்ப் உடைய இருவது அம்ச அமைதி திட்டத்துக்கு, ஹமாஸ் இப்போது பதில் அளிச்சிருக்கு. 

இஸ்ரேல் தயார்.

இஸ்ரேல், கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க டிரம்ப் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. யுத்தத்தை முடிக்க, இஸ்ரேல் நிர்ணயித்த கொள்கைகளுக்கு ஏற்ப, டிரம்ப் மற்றும் அவரது குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம். இஸ்ரேலின் கொள்கைகள், டிரம்ப் பார்வைக்கு ஏற்பவே அமைந்துள்ளன என்று நெதன்யாஹூவின் அலுவலகக் குறிப்பு தெரிவிக்கிறது.

நீண்ட போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் தயார். காசா மீதான தாக்குதலை நிறுத்த, இஸ்ரேலுக்கு டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். உடனடியாக அனைத்து கைதிகளையும் விடுவிக்க, ஹமாசும் இஸ்ரேலும், தயாராகி வருகின்றன. காசாவை வெளிநாட்டினர் நிர்வகிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மக்களை வெளியேற்றும் திட்டத்தையும். ஆயுதங்களை ஒப்படைக்கும் நிபந்தனையையும், ஹமாஸ்  ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. 

இருவது அம்ச ட்ரம்ப்  திட்டத்தின், முதல் பகுதியை நிறைவேற்ற, இஸ்ரேல் தயாராகி வருவதாக நெதன்யாஹுவுடைய அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.  இதற்கான முதல் படியாக,  ஹமாஸிடம் உள்ள, இறந்த மற்றும் உயிருடன் உள்ள, அனைத்து  கைதிகளை விடுவிப்பதும், உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வருவதும் இதில் அடங்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், சரியாக நடக்கக்கூடாது தெரியாத ஒரு சிறிய பெண் குழந்தை, அந்த இரவு நேரத்தில், எங்கு செல்வது என்று தெரியாமல், செல்வதற்கு இடமும் இல்லாமல், குடும்பமோ உறவினர்களோ யாரும் இல்லாமல், அங்கும் இங்கும் அழுது கொண்டு, அலைந்து திரிந்ததை பார்ப்பவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் கண்களில் கண்ணீர் குலமாக ஓடும் என்பதில் சந்தேகமே இல்லை.

---

இது உண்மையான அமைதியா? அல்லது டிரம்ப் பின் நோபல் பரிசு அடைவதற்கான பிரச்சாரமா?  

பொய்களால் சதாம் ஹுசைனைக் கவிழ்த்த டோனி பிளேர், மீண்டும் மேடைக் காட்சியில்.  இராக் நாட்டை பொய் தகவல்களால் அழித்த முக்கியமான அரசியல் முகமாக இருந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், இப்போது காசாவை மீண்டும் கட்டமைக்க, டிரம்ப் உடைய  திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்க போறார்னு தகவல்.

டிரம்ப் உடைய இருவது அம்ச காசா திட்டத்தில் , காசாவை சர்வதேச நிலைக்கு எடுத்துச்செல்லும் பொறுப்புக்கு தலைமை ஏற்க்கப் போறாராம்.

பிளேரோட think tank, காசாவுக்கான, போருக்குப் பிந்தைய நிலைக்கான திட்டத்தை வரையறை பண்ணியிருக்காங்க

டோனி பிளேர், டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாஹு ஆகிய மூவரும், காஸாவை கடற்கரை சுற்றுலாத்தலம் மாதிரியான ஒரு பொருளாதார மண்டலத்தை உருவாக்காத திட்டமிட்டிருக்காங்க. 

இந்த டோனி பிளேர்,ஈராக்ல பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் பொய் சொல்லி, அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து, ஈராக் மீதான படை எடுப்புக்கு வழிவகுத்தவர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுத்தி,  கோடிக்கணக்கான டாலர்களை வீணடித்தவர். 

இவர்மீது இங்கிலாந்தில் நடந்த விசாரணையிலும், உண்மைக்குப் புறம்பாக ஊழல் செய்தவர் என்பது நிரூபிக்கப்பட்டது. பழங்குடிகள் மற்றும் உள்நாட்டுப் போர்களுக்கான எச்சரிக்கையும் நிராகரித்தவர்தான் இந்த டோனி பிளேர்.

---

இதன் மூலம் காஸாவுக்கு நியாயம் கிடைக்குமா?

போருக்குப் பிந்தைய, காசாவுக்கான டோனி பிளேர் திட்டத்தில், காசா வெளிநாட்டுக்காரர்கள் பாதுகாப்பில் இருக்கும். அதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியும் கிடைக்கும். இத்தகைய காசாவை, வெளிநாட்டினர் நிர்வாகம் செய்வார்கள். உள்நாட்டு நிர்வாகத்தை, டிரம்ப் மற்றும் டோனி பிளேரும், மறைமுகமாக நெதன்யாஹுவும் நிர்வகிப்பார்கள். ஆக மொத்தம், முழுமையான காசாவின் கட்டுப்பாடு வெளிநாட்டினரிடம் இருக்கும். பாதுகாப்பு, பொருளாதாரம், மற்றும் சட்டம், ஒழுங்கு, அனைத்தும் இஸ்ரேலுடைய கண்ணசைவில் இருக்கும். 

இங்கே, பாலஸ்தீனியர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன, மக்களின் விருப்பங்கள் நசுக்கப்படுகின்றன. இந்த டோனி பிளேரின் தலைமையை பாலஸ்தீன மக்கள் ஏற்கவில்லை. 

இப்போ,அமைதின்னு  சொல்லி, அடக்குமுறையை சட்டபூர்வமாக்கும் திட்டமா இருக்குனு, பலர் கேள்வி எழுப்புறாங்க.  அமைதி இல்லாத, நலிந்துபோன மக்களிடம், நியாயம் இல்லாத பிரச்சாரம் செய்து . நியாயம் உள்ளதுபோல வடிவமைக்கப்படும் ராட்சசர்களின்  நிழல் ஆட்சி, எதிர்காலத்தில் நடக்க இருக்கிறது .  

டோனி பிளேர் உடைய வருகை, ஒரு பழைய பாவம்.  இதற்க்கு எதிராக, இனி ஒரு புதிய போராட்டம் வெடிக்குமா? வெடித்தாலும் அது நிலைக்குமா? போராட்டம் நடத்துகிற தெம்பும், ஆதரவற்றிருக்கும் மக்களிடம் இருக்குமா? மனித சக்திகளைத்தாண்டி இறைவன்தான் துணை இருப்பானா?

காஸாவுக்கு மறுவாழ்வுன்னு சொல்லி, முழு காஸாவையும் ஆட்டையப்போடப்  பாக்குறாங்க, கனகச்சிதமா அதற்கு அரசியல் சாயம் பூசுறாங்க.  பல்லாயிரக்கனக்கில் உயிர்த் தியாகம் செய்த, பச்சிளங்குழந்தைகள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பல்துறை வல்லுநர்கள் அனைவரும் எதற்காக தங்கள் உயிரையும் துச்சமாகப் பணயம் வைத்தார்கள்.  அடுத்த சந்ததி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? என்ன நடக்க இருக்கிறது இனி வரும் நாட்களில்?நண்பர்களே சிந்திப்பீர். 

உங்களது உளமார்ந்த கருத்துக்களை தவறாமல் பதிவிடுவீர். நன்றி.

No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...