உலகம் அதிரும் மூன்றாம் உலகப்போர் தலைமையகம்! 😱 | 2000 அடி ஆழத்தில் WW3 Bunker - Explained in Tamil
இதற்குள் Subway உணவகம் உள்ளது. இங்கு, ஹிரோஷிமாவை விட ஆயிரம் மடங்கு பாதுகாப்பு!
பல வேலைகளுக்காக, பணியாளர்கள் இன்னமும் இந்த நிலையத்தில் மாறி மாறி பணியில் இருக்கிறார்கள், தேவையான எந்த நேரத்திலும் உலகத்திலிருந்து, இந்த ராட்சதக் கதவுகளை அடைக்கத் தயாராக இருக்கிறார்கள். சமீபத்திய வரலாற்றில், இரண்டாவது முறையாக, இந்த பங்கரின் கதவுகள், Inside Armageddon நியூஸ் நேஷனுக்கு திறக்கப்பட்டது. சேயன்னி மலைத் தொகுப்பில் , ஒரு பரந்து விரிந்த நிலத்தடியில் உருவாக்கப்பட்ட இந்த நகரம். நேரடியான நியூக்ளியர் தாக்கங்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாபெரும் bunker, அமெரிக்க முக்கிய புள்ளிகளை பாதுகாக்க தயாராக காத்திருக்கிறது. மூன்று அடி தடிமனான எஃகு கதவுகளும், பல சோதனைப்புள்ளிகளும், பின்னால் பூட்டப்பட்டுள்ள இந்த கோட்டையை, ஹிரோஷிமாவுக்கு வீசப்பட்ட பாமை விட, ஆயிரம் மடங்கு வலிமையான நியூக்ளியர் வெடிப்பை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது. இந்த நிலத்தடி நகரத்தில், தனது சொந்த மின் நிலையங்கள், குடிநீர்க் குளங்கள், பல நாட்களுக்குத் தேவையான, உணவு சேகரிப்பு அமைப்பையும் கொண்டுள்ளது.
மேலும் இந்த அபாய அமைப்பிற்குள், கமாண்ட் சென்டர்கள், கம்யூனிகேஷன் ஹப்புகள், குடியிருப்புகள், மருத்துவ அமைப்புகள், டேட்டா சென்டர்கள், அவசரகால சிகிச்சை மையங்கள், ஆகியவையும் உள்ளன.
அந்த சிக்கலான வளாகத்தில், தனிதத்துவமாக செயல்பட்டு வரும் சப்வே உணவகமும் உள்ளது, இது, உலகில் மிக பாதுகாப்பான சப்வே, என்று குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா வடக்கு கட்டளை, மற்றும், வட அமெரிக்க, NORAD என்றழைக்கப்படும், விண்வெளி பாதுகாப்பு கட்டளை கமாண்டராக உள்ள, ஜெனரல் கிரெகரி கில்லோட் இருக்கிறார். அமெரிக்காவிற்கு வரும், நவீன அச்சுறுத்தல்கள், அமெரிக்க விமானப்பரப்பில், ரஷ்ய விமானங்கள் பறக்கும் நிகழ்வுகள், சீன கண்காணிப்பு பலூன்கள், அல்லது சைபர் தாக்குதல்கள், போன்றவை குறித்து கவலைப்படவில்லை என கிரிகோரி கூறினார். நாம் தயாராக உள்ளோம். ஐந்து ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள, பதினைந்து கட்டிடங்கள், அணு வெடிப்பின் அதிர்வை உறிஞ்சுவதற்காக, மிகப்பெரிய ஸ்பிரிங்குகளின் மேல் தொங்க வைக்கப்பட்டுள்ளன.
“பேட்டில் டெக்” எனப் பெயரிடப்பட்ட இந்தக் கோட்டை, பேரிடர் ஏற்படும் போது, அமெரிக்க மற்றும் கனடிய படைகளுக்கான, கட்டளை தலைமையகமாக செயல்படும். பேரழிவுப்போர் நடக்கும், போர் காலத்தின் உச்ச நேரத்தில், பூமியில் மிக பாதுகாப்பான இடம், என்று குறிக்கப்பட்ட குகைகள், மற்றும் பாதுகாப்பு அறைகளின், குழப்பமான அமைப்பு, சோவியத் ராக்கெட்டுகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. டிரம்ப், இரண்டாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டில், இதன் வாசல்களை ஊடகத்திற்கு திறந்தார், அப்போது ஸ்டீவ் ரோஸ், அடிப்படை துணை இயக்குநர், இதை உலகின் மிக பாதுகாப்பான வசதி, என கூறினார். அணு ஆயுதப் போர் ஒன்றில், அமெரிக்காவிற்கான பாதுகாப்பு அமைப்பு, முன்பே திட்டமிடப்பட்டுள்ளது. பல நவீன கருவிகள், நுகர்விகள், ஹைட்ராலிக் இயந்திரங்கள், மற்றும், எலக்ட்ரோமெக்னெடிக்ஸ் அதிர்வுகளிலிருந்து, எலெக்ட்ரானிக்ஸ் பாதுகாப்பு செய்து கொண்டிருக்கும். இந்த நியூக்ளியர் குண்டு சுரங்கத்தின் கதவுகள், ஹைட்ராலிக் இயந்திரங்களால், நாற்பத்தைந்து விநாடிகளில் மூடவைத்து, உள்ளகத்தை பாதுகாக்க முடியும், அல்லது அவசரகாலத்தில் கையால் மூடப்படலாம். ஆனால், மூண்டு ஆதி தடிமனான ராட்சத இரும்பு கதவுகளை மூட, பல வலிமையான நபர்களின் உழைப்பு தேவைப்படலாம்.
அணு ஆயதப் போரின்போது, அமெரிக்க அதிபர், நேரடியாக வெள்ளை மாளிகையின் அடியில் உள்ள, பாதுகாப்பு கூடாரத்திற்கு அழைத்து செல்லப்படுவார், பின்னர் விமானப் படையின் சிறப்பு விமானத்தில் பயணம் செய்த்து, இந்த மலையடிக் கோட்டைக்கு வந்து சேருவார்.
இந்த கோட்டைக்கு, அமெரிக்க அதிபருடன், அவரது அலுவலக சகாக்கள் பயணம் செய்வார்கள், அதே சமயம், பாதுகாப்புத் துறை செயலர், குழு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், வேர்ஜீனியாவில் உள்ள மவுண்ட் வேதெர், அல்லது, பென்சில்வேனியாவில் உள்ள ரேவன் ராக் உள்ளிட்ட, கடுமையான பாதுகாப்புள்ள தொடர்ச்சித் தளங்களுக்கு நகர்த்தப்படுவார்கள்.
மேலும் இதுபோல பல செய்திகளுக்கி எமது நுண்ணுரைச்சேனலை subscribe செய்து கொள்ளுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.
===============
No comments:
Post a Comment