குடும்பத்துடன் ரஸ்சியாவில் தஞ்சமடைந்த பஷார் அல்.-அசாத்.
சிரிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அசாத்தை ஈரான் பலமுறை எச்சரித்ததாகத் தகவல்.
----
சிரிய மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அசாத்தை ஈரான் பலமுறை எச்சரித்தது என்று ஈரான் சபாநாயகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத், தனது மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று, மறைந்த ஈரான் முன்னாள் தளபதி, ஜெனரல் காசிம் சுலைமானி பலமுறை அறிவுறுத்தியதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது ஃபக்கீர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.
மின்னல் வேகத் தாக்குதல்களைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் - எச்ட்டீஎஸ் தலைமையிலான போராளிக் குழுக்கள், சிரிய தலைநகரைக் கைப்பற்றிய பின்னர், ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானில் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பில் கலிபாஃப் பேசினார்,
அப்போது, நான் இதை வெளிப்படையாகக் கூறுவேன் - தியாகி சுலைமானி, தனது மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று, பஷார் அல்-அசாத்திடம் பலமுறை கூறினார், ஏனென்றால், ஐ.எஸ் தவிர, சில எதிர்க்கட்சிகள் ஆயுதமேந்திய போராட்டக் குழுக்கள் தோன்றிய காரணத்தையும், அவை அஸ்தானா கூட்டங்களில் கூட விவாதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
--
ஈரான் ஒருபோதும் HTS குழுக்களை எதிர்கொண்டதில்லை, ஆனால் தாயிஷ் பயங்கரவாதிகளுடன் மட்டுமே எதிர்ப்பைக்கையாண்டது என்று கலிபாஃப் மேலும் கூறினார்.
சிரிய மக்கள் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஈரான் மதிக்கிறது என்றும், சிரியாவில் அமைக்கப்படும் அரசாங்கத்தின் அடிப்படையில் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிரியாவில் அமையும் புதிய அரசாங்கம், தாயிஷ் பயங்கரவாதிகளின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு அணுகுமுறையைப் பின்பற்றவில்லை என்றாலும், இஸ்ரேலிய ஆட்சியுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றாலும், முஸ்லிம் நாடுகளிடையே ஒற்றுமையை உருவாக்க, ஈரான் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று, ஈரானின் உயர்மட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஜெஷ்கியன், டமாஸ்கஸை போராளிகள் கைப்பற்றிய பின்னர், நாட்டின் அரசியல் தலைமை குறித்து ஒருமித்த கருத்தை எட்ட, சிரியாவில் உள்ள எதிரெதிர் பிரிவுகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.
நாட்டின் எதிர்காலம் மற்றும் அதன் அரசியல் அமைப்பு குறித்து சிரிய மக்கள்தான் முடிவுகளை எடுக்க வேண்டும், என்று பெஜெஷ்கியன் மேலும் கூறினார்.
மாஸ்கோவில் அசாத் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள நிலையில், சிரிய எதிர்த்தரப்பு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்வதாக ரஷ்யா கூறுகிறது.
ஜனாதிபதி பஷார் அல்-அசாத் தனது குடும்பத்துடன் மாஸ்கோ வந்தடைந்ததாக கிரெம்ளின் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது, சிரிய தலைநகர் மற்றும் அரபு நாட்டின் பல முக்கிய மாகாணங்களை கட்டுப்பாட்டில் எடுத்த, ஆயுதமேந்திய சிரிய எதிர்த்தரப்பின் பிரதிநிதிகளுடன் ரஷ்ய அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.
சிரியா அதிபர் ஆசாத் தனது குடும்பத்தினருடன் மாஸ்கோ வந்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது என்று, கிரெம்ளின் வட்டாரம் ஆர்ஐஏ நோவோஸ்டிக்கு தெரிவித்துள்ளது.
---
நேற்றிரவு அசாத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை சிரிய தலைநகர் டமாஸ்கஸ் மீது கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது; Mezzeh விமானத் தளம் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரிய உளவுத்துறை தலைமையகமும் தாக்கப்பட்டுள்ளது. அங்கு இப்பொழுது பாரிய நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
---
மேலும், பல செய்திகளுக்கு, தொடர்ந்து இனைந்திருங்கள், Subscribe செய்து கொல்லுங்க. நன்றி.
No comments:
Post a Comment