Wednesday, 7 February 2024

ஏமன் பிரதம மந்திரி அதிரடி மாற்றம் | பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு...


ஏமன் பிரதம மந்திரி அதிரடி மாற்றம். பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு 

ப்ளிங்கன் செல்லும்போதெல்லாம் ஜெர்க் ஆகி Statement.கொடுக்கும் சவூதி அரேபியா.

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்த பெல்ஜியம், ஸ்பெயின்.

காசா பகுதியில் மனிதாபிமான நிலைமை மோசமடைகிறது 

ஏமன் வெளியுறவு அமைச்சர் அகமது அவாத் பின் முபாரக் பிரதமராக நியமனம்

செங்கடல் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மைன் அப்துல் மாலிக் சயீதுக்கு பதிலாக பின் முபாரக், யேமெனின் பிரதம மந்திரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம், புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் அகமது அவாத் பின் முபாரக்கை நியமித்துள்ளது.

அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாட்டில், பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், பின் முபாரக் மைன் அப்துல்மாலிக் சயீத்தை மாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி உரிமங்களை ரத்து செய்த பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின்  அரசாங்கங்கள்.

"காசா பகுதியில் மனிதாபிமான நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மோசமடைந்து வருவதால்" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினரான, பரோனஸ் சயீதா வார்சி, சமீபத்திய U N R W A  குற்றச்சாட்டுகள் குறித்து, ஸ்கை நியூஸில் பேசினார். U N R W A  ஊழியர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், காசாவில் உதவி முயற்சிகளைத் தொடர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் பல பணக்கார முஸ்லிம் நாடுகள் உள்ளன. 

அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் என்றால், முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஏன் அவர்கள் உதவி வழங்குவதில்லை? 

பாலஸ்தீனத்தை ஆதரிக்க மேற்கத்திய நாடுகளிடம் உதவி கேட்பது வெட்கக்கேடானது அல்லவா? அரேபியர்களை விட மேற்கத்தியர்கள் சிறந்த முஸ்லிம்கள் என்பதை இது குறிக்கிறது என்றும் பேசப்படுகிறது. 

ரசியாவின் சொத்துக்களை முடக்கி அதை உக்ரைனுக்கு வழங்குகிறோம் என்று மேற்கத்தியர்களும், அமெரிக்காவும்  சொல்வதைப்போல, அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் விற்கும் கச்சா எண்ணையின், விலையை இரண்டு மடங்காக  உயர்த்தி, அந்த வருமானத்தைகே கொண்டு  பாலஸ்தீனர்களுக்கு உதவப்போகிறோம் என்று சொல்லும் துணிவு உண்டா என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பதுபோல, முஸ்லீம் என்கிற உணர்வும்,  இஸ்லாமிய சகோதர உணர்வும் சிறிதேனும் இருந்தால், அரபியர்கள் சும்மா இருப்பார்களா? பாலஸ்தீனர்களும் அராபியர்கள் தானே. காசா மீது தாக்குதல் துவங்கியபோதே பாலஸ்தீனர்கள் கூறிவிட்டார்கள், எங்களுக்கு ஏதாவது உதவி தேவை என்றால், நாங்கள் எங்களை சுற்றியுள்ள சகோதர அரபு நாடுகளைக் கேட்பதில்லை.  அவர்கள் பயனற்றவர்கள்.  ஆனால் இறைவனிடம்தான் கேட்கிறோம், இறைவா எங்களைக் காப்பாற்று என்று.  

சவுதி அரேபியா மீண்டும் ஒரு  பயனற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்  "கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஏழுகலில் இருந்த எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன அரசு நிறுவப்படாவிட்டால், நாங்கள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த மாட்டோம்." என்று மறுபடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் தினந்தோறும், அப்பாவிகளும், குழந்தைகளும் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பின் சல்மானால், ஒரு குழந்தையைக்காப்பாற்ற முடியுமா? இல்லை ஒரு குழந்தையின்  உடைந்த பொம்மையையாவது காப்பாற்ற முடியமா? இஸ்லாமிய உலகின் மையப்புள்ளியாக இருக்கும், சவூதி அரேபியா, தகுதியற்ற அரசாட்சியின் கைங்கர்யத்தால், இன்று நூற்று என்பது கோடி முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், என்று உலக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Cambridge பல்கலைக்கழக மாணவர்கள், அப்பல்கலைக்கழக துணைவேந்தரை,  விருந்தினர் பேச்சாளராக அளித்திருந்த நிலையில்,  அந்த துணைவேந்தரின் பேச்சை குறுக்கிட்டு, "Gaza மீது நடக்கின்ற கொடுமைகளைக் கண்டும், பல்கலைக்கழகத்தின் மௌனம் மற்றும்,  எதிர்த்து குரல் கொடுக்காத" செயலாற்ற தன்மையி லுள்ளதாகச் சாடினர்.

பிறகு, மாணவர்கள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், பல்கலைக்கழகம் புறக்கணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.\

சிரியா நாட்டு  ஜனாதிபதி பஷார் அல்-அசாத், பதிமூன்று  ஆண்டுகளுக்குப் பிறகு,  டமாஸ்கஸுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸால் அனுப்பப்பட்ட, முதல் தூதரை வரவேற்றுள்ளார்.

அபுதாபியின் தூதராக, ஹசன் அகமது அல்-ஷேஹியின் நற்சான்றிதழ்களை, அசாத் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டதாக, அதிகாரப்பூர்வ சிரிய அரபு செய்தி நிறுவனம் (சானா) தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போர் நேரலை: ரஃபா நிலைமை 'மணிக்கு மணி தீவிரம்'

பதினைந்து லட்சம், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் தாயகமான, தெற்கு ரஃபா நகரில், இஸ்ரேலிய தரைப்படை தாக்குதல் குறித்து, கவலைகள் அதிகரித்து வருகின்றன.

காசா போரில், சமீபத்திய போர் நிறுத்தத்திற்கான, எடுக்கப்படும் முயற்சிகளுக்கு, ஹமாஸ் "சாதகமாக" பதிலளித்தது, ஆனால் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நேரம் எடுக்கும் என்று, கத்தாரும் அமெரிக்காவும் கூறுகின்றன.

'ஆத்திரமூட்டும் சுற்றுப்பயணங்கள்': டஜன் கணக்கான இஸ்ரேலியர்கள், அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் நுழைந்தனர்

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள, இஸ்லாமின் மூன்றாவது புனித இடமான அல்-அக்ஸா மசூதியின் வளாகத்திற்குள், டஜன் கணக்கான இஸ்ரேலியர்கள் நுழைந்ததாக, வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய குழு, "அதன் முற்றங்களில் ஆத்திரமூட்டும் சுற்றுப்பயணங்களை" மேற்கொண்டது மற்றும், மத சடங்குகளை நடத்தியது என்று, நேரில் பார்த்தவர்களை மேற்கோள் காட்டி அது கூறியது.

கடந்த வாரம், வெள்ளிக்கிழமை தொழுகைக்காக, அல்-அக்ஸா மசூதிக்கு சென்ற,  முஸ்லீம் வழிபாட்டாளர்களை இஸ்ரேலிய படைகள் தடுத்தன.

அல்-அக்ஸா தளத்தின் புனித்தன்மை கெட்டுவிடும் என்பதால்,  மசூதி வளாகத்தின் எந்தப் பகுதிக்குள் நுழைவதும்,  யூதர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது, அல்-அக்சா என்பது முழு வளாகத்திற்கும் வழங்கப்பட்ட பெயர் மற்றும், இரண்டு முஸ்லீம் புனித இடங்களுக்கு தாயகமாக உள்ளது: டோம் ஆஃப் தி ராக் மற்றும் அல்-அக்சா மசூதி, கிப்லி மசூதி என்றும் அழைக்கப்படுகிறது, இது எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும்.

காசாவில் பத்து வயது குழந்தை ஜுவைரியா எழுதிய ஓர் சிறு கவிதை. இதோ.--

வீடு ஓய்வெடுக்கட்டும்.--

அதை எழுப்பவேண்டாம்..--

எழுப்பினால் வலியும்  எழும்பும் ..--

வீட்டுக்கு ஆன்மா இருக்கிறது,,--

மனிதரின் ஆன்மாவைப்போல்..--

வீடுகளிலும் ஆன்மா உள்ளது..--

ஓ . வீடே . 

உங்க அன்புக்கு உரியவங்க,

எங்க போனாங்கன்னு சொல்லுங்க...

மேலும் செய்திகள் வந்து   கொண்டிருக்கின்றன.  எங்கள் channelஐ subscribe செய்துகொள்ளுங்கள், கமெண்டுகளையும் பதிவிடுங்கள். நன்றி.

தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர், நலேடி பாண்டோர் கூறுகையில், காசாவில் சண்டையிட, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளில் சேரும் தங்கள் நாட்டு குடிமக்கள் திரும்பி வரும்போது, வழக்கு தொடரப்படும் என்று, குறிப்பிட்டுள்ளார்.

"ரிஷி சுனக் மற்றும், கேமரூன் ஆகியோர், சர்வதேச நீதிமன்றம் அதன் தீர்ப்பை எட்டுவதற்கு முன்பே, தீர்ப்பைக் குப்பையில் போட்டனர்.

இதுவரை பிரிட்டன், இஸ்ரேலின் ஒவ்வொரு வார்த்தையையும், சுவிசேஷ சத்தியத்திற்கு நெருக்கமாக கருதுகிறது."

இந்த ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, I M F, U N S C, U N S F எல்லாமே ஒரு கண்துடைப்புதான்.  ஏனென்றால், இந்த  அமைப்புகள் எல்லாம், மேற்கத்தியர்களின்   கைப்பாவையாக, அவர்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக  மட்டுமே உருவாக்கப்பட்டது. அவர்கள்தான் இந்த அமைப்பின் முதலாளிகள். அவர்கள்தான் இந்த அமைப்புகள் செயல்பட பணம் கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதைத்தான் இந்த அமைப்புகள் கேட்கவேண்டும். எனவே இந்த  அமைப்புகள் எல்லாம் தனது முதலாளிக்கு எதிராக  எதுவும் செய்து விட முடியாது.

பாகிஸ்தானில் தேர்தல் அலுவலகங்களில் குண்டுவெடிப்பு.: இருபத்தாறு பேர் பலி.

தென்மேற்கு பாகிஸ்தானில், பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கு முந்தைய நாளான புதன்கிழமையன்று, ஒரு சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்தில் குண்டு வெடித்ததில், குறைந்தது பதினான்கு  பேர் கொல்லப்பட்டனர், மற்றும், இரண்டு டஜனுக்கும் அதிகமானோர், காயமடைந்தனர் என்று, அதிகாரிகள் கூறினர்.

முதல் தாக்குதல், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள, பாஷின் மாவட்டத்தில் நடந்ததாக, மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர், ஜான் அச்சக்சாய் தெரிவித்தார். காயமடைந்தவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலரது நிலைமை, கவலைக்கிடமாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானில், மற்றொரு அரசியல் கட்சி அலுவலகத்தில் நடந்த, இரண்டாவது குண்டுவெடிப்பில், மேலும்  பன்னிரண்டு  பேர் கொல்லப்பட்டனர், இறப்பு எண்ணிக்கை குறைந்தது இருபத்தாறு  ஆக உயர்ந்தது.

இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாண தகவல் அமைச்சர் ஜான் அச்சக்சாய் கூறுகையில், "இந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம்,  உள்ளூர் ஜே யு ஐ எஃப் வேட்பாளரின் தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் நடந்தது" என்று கூறினார்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.

ஹமாஸ்  பிடியிலுள்ள இஸ்ரேல் கைதிகளை கொல்லத்துடிக்கும் இஸ்ரேல் பயங்கரவாத ராணுவம்.  ஹமாஸ் பிடியில் இஸ்ரேல் கைதிகள் உள்ளவரைதான் தனக்கு உள்நாட்டில் எதிர்ப்பு இருக்கும். அதேநேரம், தந்திரமாக ஹமாஸிடம் உள்ள கைதிகளை எல்லாம் கொன்றுவிட்டால், உள்நாட்டில் தமக்கு மக்கள் ஆதரவு பெருகிவிடும் என்று கணித்து. தன்னாட்டு குடிமக்களையே கொலை செய்ய நெட்டன்யாஹு துடித்துக்கொண்டு இருக்கிறார் என்னும் செய்திகள் வரத்துவங்கியுள்ளன.

இந்த செய்தி  உண்மையானால், இஸ்ரேலிய ஆட்சி, இஸ்ரேலிய கைதிகளைக் கண்டுபிடித்து கொல்ல, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உளவுத்துறை டிரோன்களை தகவல்கள் சேகரிக்கப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

காசாவில் இறப்புகளின் எண்ணிக்கை, விகிதாசாரமற்ற வகையில் அதிகமாக உள்ளது. மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் போன்றவர்கள் கொல்லப்படுவதைப்போன்று ஹமாஸின் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல, குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

---




No comments:

Post a Comment

அமெரிக்காவை நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி | விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? | Space War 2026

அமெரிக்காவையே நடுங்க வைக்கும் சீனா-ரஷ்யா-ஈரான் கூட்டணி! 😱 விண்வெளி போரில் இந்த விண்வெளி அதிகார மையத்தின் பின்னணி என்ன? உலகமே ஒரு மிகப்பெரி...