காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் அதிகரிப்பு. இருபத்தெட்டு பேர் பலி.
ஏமனின் ஹவுதிக்களுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்கும் ரஷ்யா.
லெபனானில் உள்நாட்டுக் கலவரம் ஏற்படுமா?
வீடற்ற மற்றும் குடிகாரர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் உச்சகட்டம்.
உலகின் முதல் பத்து பிரபலமான இடங்களில் U A E.
---
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருபத்தெட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு கான் யூனிஸை விட்டு வெளியேற இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றிய, ஒரு குறிப்பிட்ட "பாதுகாப்பு மண்டலத்தில்", ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் உட்பட பன்னிரெண்டு பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
காசாவில் இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை பத்தொன்பது லட்சத்தை எட்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தெற்கு நகரமான கான் யூனிஸுக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் இராணுவ உத்தரவால் இரண்டரை லட்சம்பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
-----
ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு நவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. யேமனில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு, மேம்பட்ட கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் கப்பல் ஏவுகணைகளை வழங்க, ரஷ்யா பரிசீலித்து வருவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இது மேற்கத்திய சக்திகள் செங்கடலிலும், அதற்கு அப்பாலும், வணிக கப்பல்களைப் பாதுகாக்க முனைகையில், இந்த நவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கப்பல்படைக்கு பெரும் சவாலாகவும், ஏமன் மீதான தாக்குதல்களுக்கு பின்னடைவையும், தர்ம சங்கடத்தை அதிகரிக்கக் கூடும்.
ஈரானுடன் மாஸ்கோவின் வளர்ந்து வரும் ஒத்துழைப்பு அணிசேர்க்கை மற்றும், மேற்கத்திய எதிர்ப்பு சக்திகளிடையே புதிய கூட்டணிகளுக்கான அதன் தேடல் ஆகியவை, ஹவுத்திகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புக்கு வழிவகுத்துள்ளன. இந்த அபிவிருத்தி ரஷ்யா எழுச்சியாளர்களுக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் திறன் பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது, இது பிராந்தியத்தில் U S A மற்றும் U Kயின் நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.
சிரியா மற்றும் லெபனான் ஹெஸ்பொல்லா போராளிகள் மூலம் பெறப்பட்ட, ரஷ்ய தயாரிப்பு பி-எயிட் ஹண்ட்ரேட் ஓனிக்ஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்திருப்பதாக கூறப்படும் ஹௌதிக்கள், ஏற்கனவே அவர்களின் இராணுவ திறன்களை நிரூபித்துள்ளனர். இந்த குழு தனது சொந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணையை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன.
----
ஹிஸ்புல்லா-இஸ்ரேல் போர் லெபனானில் உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டுமா?
இஸ்ரேலுக்கு எதிராக குறைந்த அளவிலான மோதலை நடத்த ஹெஸ்புல்லா எடுத்த முடிவு லெபனானில் கலவையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
இஸ்ரேலுடனான அதன் குறைந்த மட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மாறாக, நேரடியாகப்போரில் ஈடுபடும் ஹெஸ்பொல்லாவின் முயற்சி, லெபனான் முழுவதிலும் இருந்து பாராட்டையும் கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்தப் பிளவு ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்து முதல் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறு வரை நடந்த உள்நாட்டுப் போரை நினைவுபடுத்துகிறது; அந்தப் போரில் லெபனானில் இருந்து நடத்தப்படும் இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனிய ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ஆதரவு அல்லது எதிர்ப்பில் பல குழுக்கள் அரசியல் ரீதியாக பிளவுபட்டிருந்தன.
இப்பொழுது ,இஸ்ரேல் ஈரான் ஆதரவுடைய ஹெஸ்பொல்லாவிற்கு எதிராக முழுப் போருக்கு அச்சுறுத்துகையில், குறுங்குழுவாத அழுத்தங்கள் பெருகியுள்ளன.
ஆயினும், "இப்போது லெபனானில் யாரும் போரை விரும்பவில்லை, ஆனால் இஸ்ரேல்தான் மோதலை நடத்துகிறது" என்று ஹெஸ்பொல்லாவுக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படும் லெபனான் அரசியல் ஆய்வாளர் காசிம் காசிர் கூறினார்.
ஆனால், உண்மையான போர் வெடித்தால்தான் இந்தக் கேள்விக்கான சரியான விடை கிடைக்கும்.
---
அனைத்து முக்கிய அமெரிக்க நகரங்களிலும் எல்லா இடங்களிலும் வீடற்றவர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை மலைப்பூட்டும் வகையில் அதிகரித்துள்ளது.
வீடுகளில்லாமல் சுற்றித்திரிவது மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினை, உண்மையில் முக்கிய அமெரிக்க நகரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க கவலையாக வளர்ந்துள்ளது. இது குறித்து சில முக்கிய புள்ளிகளை ஆராய்வோம்.
கொரோனா காலத்துப் பிரசிச்சினைகள் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் மாநிலங்களில் வீடற்ற மக்களின் நிலை படு மோசமாக அதிகரித்து வருகிறது. வீடற்ற மக்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் கொரோனா காலத்துடன் ஒப்பிடும்போது, தங்குமிடம் இல்லாத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பகீர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
உயரும் வீட்டுச் செலவுகள், மற்றும் உணவு மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது. நிதி ரீதியாக சவால் செய்த அமெரிக்கர்களை தற்போது உயிர்நாடி இல்லாமல் செய்துள்ளது.
-------
மாஸ்டர்கார்டு நடத்திய சர்வேயில் உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்கச்செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மக்கள் செலவு செய்வதற்கான பொருளாதார நிலைமைகள் அதிகரித்திருப்பதாகவும் தனது சர்வேயில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மக்கள் படையெடுக்கும் சுற்றுலாத்தலங்களில் முதல் பத்து இடங்களில் ஒன்றை U A E - ஐக்கிய அரபு அமீரகம் பிடித்துள்ளது என்று மாஸ்டர் கார்டு சர்வே தெரிவித்துள்ளது.
-----
No comments:
Post a Comment